Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை தர வேண்டும்- டாப்ஸி வலியுறுத்தல்
சென்னை: நாடு முழுவதும் பாலியல் குற்றங்கள் பெருகி வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த மிகக் கடுமையான தண்டனை மட்டுமே ஒரே தீர்வு என்று கூறியுள்ளார் நடிகை டாப்ஸி.
நாடு முழுக்க அன்றாடம் நிகழ்ந்து வரும் பாலியல் குற்றங்கள் குறித்து கோபமடைந்துள்ள டாப்சி, இதுகுறித்து கூறுகையில், "பாலியல் பலாத்கார குற்றங்கள் தினசரி அதிகரித்து வருவது வேதனையைத் தருகிறது. சிறுமிகளை பெரும்பாலும் குறிவைக்கிறார்கள் இந்த கொடூர மனம் படைத்தவர்கள்.
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு உடனடியாக கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
நீதிமன்றத்தில் இவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகள் தாமதமானால் மேலும் இதுபோன்ற வன்முறைகள் அதிகரிக்கவே செய்யும்.
நீதிமன்றங்கள் இந்த வழக்குகளை விரைவாக விசாரணைகளை முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும். அதிகமான அபராதமும் விதிக்க வேண்டும். அப்போது தான் சமூகத்தில் கற்பழிப்பு குற்றங்களை கட்டுப்படுத்த முடியும்.
தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் நடப்பது வேதனையையும் அதிர்ச்சியையும் தருகிறது," என்றார்.