Don't Miss!
- Sports தோனி எடுத்த மிகப் பெரிய முடிவு! சிஎஸ்கே ரசிகர்களின் வேண்டுதல் நிறைவேற போகுது?LSGபோட்டியில் சர்ப்ரைஸ்
- News லோக்சபா தேர்தல்: தமிழ்நாட்டில் "அதிக முறை" சரித்திரம் படைத்தவர்கள் யார் யார் தெரியுமா? இதோ லிஸ்ட்!
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Lifestyle ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? இந்த 5 ஆயுர்வேத வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தனி ஒருவன்: தடயவியல் நிபுணராக வரும் நயன்தாரா
சென்னை: ஜெயம் ரவி - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் தனி ஒருவன் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளியாகின்றது, இந்தப் படத்தில் நயன்தாரா போலீசாக நடிக்கிறார் என்று முதலில் தகவல்கள் வெளியாகின.
ஆனால் அது உண்மை அல்ல நாயகன் ஜெயம் ரவி இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார், இந்தப் படத்தில் முதன்முறையாக தடயவியல் அதிகாரியாக நடித்திருக்கிறார் நயன்தாரா.
சமூக அக்கறையுடன் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்று இயக்குநர் மோகன் ராஜா கூறியிருக்கிறார், படத்தில் குற்றங்களைக் கண்டுபிடிப்பவராக ஜெயம் ரவியும் அந்தக் குற்றங்களின் பின்னணியைக் கண்டுபிடிப்பவராக நயன்தாராவும் இணைந்து நடித்திருக்கின்றனர்.
ரோஜா நாயகன் அரவிந்த் சாமி படத்தில் வில்லனாக அவதாரம் எடுக்க, ஹிப்ஹாப் தமிழன் ஆதி படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். தனி ஒருவன் படத்தின் டீசர் கடந்த வெள்ளியன்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஜெயம், எம்.குமரன் S/O மகாலட்சுமி, உனக்கும் எனக்கும் மற்றும் சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, இயக்குநர் மோகன் ராஜா ஜெயம் ரவியுடன் தனி ஒருவன் படத்தில் இணைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்திற்கு கடும் எதிர்பார்ப்பு உள்ளது.