Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தெறி... விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் - ராதிகா
சென்னை: தெறி திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக இருக்கும் என்று அப்படத்தில் நடித்திருக்கும் நடிகை ராதிகா தெரிவித்திருக்கிறார்.
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'தெறி' படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து படத்தின் டீசரை இன்று நள்ளிரவில் வெளியிட படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர். சுமார் 50 நொடிகள் ஓடக்கூடிய இந்த டீசர் விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும் என்று கூறுகின்றனர்.
ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் பர்ஸ்ட் லுக் அதிகரித்து இருந்தது.
இதனால் இன்று நள்ளிரவில் வெளியாகும் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அபரிமிதமான ஒரு வரவேற்பு இருக்கிறது.இந்நிலையில் படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கும் ராதிகா விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை கூறியிருக்கிறார்.
Finished dubbing for #Theri . A treat for @actorvijay fans. Looking good 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
— Radikaa Sarathkumar (@realradikaa) February 4, 2016
"தெறி படத்தின் டப்பிங் பணிகள் முடிந்து விட்டன. இந்தப்படம் உண்மையில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும். படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.
ராதிகாவின் இந்த வார்த்தைகள் தற்போது விஜய் ரசிகர்களிடையேயான மகிழ்ச்சியை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது. இதனால் டபுள் உற்சாகத்துடன் டீசரை வரவேற்கக் காத்திருக்கின்றனர்.