Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
17 வருஷமாச்சு, ஆனால் அந்த ஆசை மட்டும் நிறைவேறவே இல்லையே: த்ரிஷா வருத்தம்
சென்னை: நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அந்த ஒரேயொரு விஷயம் மட்டும் நடக்கவே இல்லை என்று வருத்தப்படுகிறார் த்ரிஷா.
த்ரிஷா நடிக்க வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்த த்ரிஷா பின்னர் ஹீரோயின் ஆனார். இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து ஹீரயினாக இருந்து வருகிறார். இது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல.
இந்நிலையில் தனது திரையுலக வாழ்க்கை பற்றி அவர் கூறுகையில்,
ரஜினி
எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான் உள்ளது. நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. யாருக்கு தான் அவருடன் நடிக்க ஆசை இருக்காது.
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் நல்ல படங்களில் நடித்து வருகிறார்கள். அவர்களுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
ஆசி
நான் இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து ஹீரோயினாக இருப்பது பற்றி பலர் கேட்கிறார்கள். நடிப்பது தான் என் தொழில். வேறு யாரும் இப்படி இத்தனை ஆண்டுகளாக ஹீரோயினாக இல்லை என்று கூறுவதை பார்க்கும்போது நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்.
நடிப்பு
மாடலிங் செய்தபோது படங்களில் நடிக்க மாட்டேன் என்று நான் கூறினேன். அதன் பிறகு எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடாது என்று முடிவு செய்தேன். தற்போது நான் வாழ்க்கையின் போக்கில் செல்கிறேன்.
ராணா
அண்மையில் நடந்த விருது விழாவில் த்ரிஷாவும், அவரது முன்னாள் காதலர் ராணாவும் சந்தித்துக் கொண்டதுடன் நன்றாக பேசிக் கொண்டனர். இது குறித்து த்ரிஷாவிடம் கேட்டதற்கு, இந்த கேள்விக்கு நான் பதில் அளிக்க மாட்டேன் என்றார்.