Don't Miss!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அப்படியே தூக்கி அடிக்க ஆசைப்படும் திரிஷா
சென்னை: திரிஷாவுக்கு ஒரு வித்தியாசமான ஆசை வந்துள்ளதாக சொல்கிறார்கள். அதிரடியான, அதிரிபுதிரியான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசைதான் அது.
நடிப்பில் பல ரகம் உண்டு. இந்த பல ரகங்களையும் பலகாரம் போல சாப்பிட்டு அனுபவிக்கும் "பாத்யதை"யை தமிழ் சினிமா உலகம், நடிகர்களுக்கு மட்டுமே கொடுத்து வந்துள்ளது.
ஹீரோயின்களுக்கு எப்பவுமே லிமிட்டெட் மீல்ஸ் மட்டுமே. காதல் செய்ய வேண்டும், மரத்தைச் சுற்றி வந்து ஆட வேண்டும், ஹீரோ, வில்லன்களுடன் சண்டை போடும்போது காதை மூடிக் கொண்டு கத்த வேண்டும், ஹீரோவின் பின்னால் மறைந்து பம்மிப் பதுங்கி முகத்தில் பயம் காட்டவேண்டும். இதுபோல சின்னச் சின்ன விஷயங்கள் வரைதான் ஹீரோயின்களுக்கு எல்லை.
சில நேரங்களில் இதைத் தாண்டி அதிரடி நாயகிகளும் வந்து போவதுண்டு. அந்த வகையில் சாதனை படைத்தவர் விஜயசாந்தி மட்டுமே. அதற்குப் பிறகு அவரைப் போல சகலகலாவல்லி ஹீரோயின்களை தென்னகத் திரையுலகம் கண்டதில்லை.
இந்த நிலையில் திரிஷாவுக்கு திடீரென அதிரடியான ரோல்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளதாம். எதிரிகளை அடித்து நொறுக்கி அள்ளிப் போட வேண்டும், அதிரடியான, அடிதடியான ரோல்களில் நடிக்க வேண்டும் என்ற ஆவல் அவரை உந்தித் தள்ளுகிறதாம்.
இந்த ஆசை காரணமாக சமீப காலமாக அவர் ஆக்ஷன் படங்களை அதிகமாக பார்க்கிறாராம். அதுவும் அதிரடி நாயகிகளின் படங்களை அதிகமாக பார்க்கிறாராம்.
ஏன் இந்தத் திடீர் ஆசை என்று தெரியவி்ல்லை. அது மட்டும்தான் பாக்கி. அதையும் ஏன் விட்டு வைக்க வேண்டும் என்ற நினைப்பில் இப்படி ஆசைப்படுகிறாரோ என்று தெரியவில்லை.