Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
எக்ஸ்க்யூஸ்மி மீம்ஸ் கிரியேட்டர்ஸ்: ஸ்ருதியிடம் உங்க பப்பு வேகலை
மும்பை: சமூக வலைதளங்களில் தன்னை யார் கிண்டல் செய்தாலும் தனக்கு கவலை இல்லை என்று தெரிவித்துள்ளார் ஸ்ருதி ஹாஸன்.
ஸ்ருதி ஹாஸன் நடித்த பெஹன் ஹோகி தேரி இந்தி படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. படத்தை பார்ப்பவர்கள் படம் நன்றாக உள்ளதாகவும், ஸ்ருதியின் நடிப்பு அருமை என்றும் பாராட்டி வருகிறார்கள்.
பெஹன் ஹோகி தேரி படத்தால் ஸ்ருதி மகிழ்ச்சியில் உள்ளார்.
மீம்ஸ்
ஸ்ருதி ஹாஸன் என்றாலே மீம்ஸ் கிரியேட்டர்கள் குஷியாகிவிடுகிறார்கள். ஸ்ருதியின் லுக், அவரின் குரலை கிண்டல் செய்து மீம்ஸ் போடுகிறார்கள். மேலும் சிலர் ஸ்ருதியை கலாய்த்து ட்வீட் போடுகிறார்கள்.
ஸ்ருதி
சமூக வலைதளங்களில் தன்னை கிண்டல் செய்வது பற்றி ஸ்ருதி பேசியுள்ளார். யார் கிண்டல் செய்வதாலும் எனக்கு எந்த கவலையும் இல்லை. இது சமூக வலைதளம் மட்டும் இல்லை இது தான் மக்களின் வாழ்க்கை, எண்ணத்தை பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறேன் என்கிறார் ஸ்ருதி.
சமூக வலைதளம்
அடுத்தவர்களை பற்றி ஏதாவது முடிவுக்கு வருவது அல்லது கிண்டல் செய்வது அல்லது தாக்கிப் பேசுவது சரி என்று மக்கள் நினைக்கிறார்கள். நேரில் செய்ய முடியாததை செய்ய சமூக வலைதளம் தைரியம் அளிக்கிறது என்று ஸ்ருதி தெரிவித்துள்ளார்.
பாதிப்பு
அடுத்தவர்களின் கருத்துகள் என்னை ஒருபோதும் பாதித்தது இல்லை. அதனால் சமூக வலைதளங்களில் கலாய்ப்பது என்னை பாதிக்கவில்லை. அடுத்தவர்கள் சொல்வதை சீரியஸாக எடுத்துக் கொண்டால் யாரும் நம் வேலையையும் செய்ய முடியாது, வீட்டை விட்டு வெளியே வரவும் முடியாது என்று ஸ்ருதி கூறியுள்ளார்.