Don't Miss!
- News EVM ஓட்டுகளை VVPAT ஸ்லிப் உடன் சரிபார்ப்பதை கட்டாயமாக்க கோரி வழக்கு: விசாரிக்க மறுத்த சென்னை ஐகோர்ட்
- Lifestyle இந்த முகலாய அரசர் வாழ்க்கை முழுக்க கங்கை நீரை மட்டும்தான் குடிச்சாராம்... அதுக்கான வினோத காரணம் என்ன தெரியுமா?
- Finance இப்படியொரு திட்டம் இருப்பது தெரியுமா?! இதுல மட்டும் முதலீடு செய்யுங்கள்.. பணம் கொட்டும்..!
- Automobiles டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
- Technology பாதிக்கு பாதி விலையில் பிராண்டட் AC-க்கள்.. முழுசா 52% டிஸ்கவுண்ட்.. பட்டிதொட்டி எங்கும் ஆர்டர் பறக்குது!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
சீனியர் ஹீரோவுக்கு மனைவியாக, ஒரு பையனுக்கு அம்மாவாக நடிக்கும் வரலட்சுமி
சென்னை: அப்பா படத்தின் மலையாள ரீமேக்கில் ஜெயராம் ஜோடியாக நடிக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.
சமுத்திரக்கனி தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்த படம் அப்பா. படத்தை பார்த்தவர்கள் நமக்கு இப்படி ஒரு அப்பா கிடைக்கவில்லையே ஏன் ஏங்கும்படி நடித்திருந்தார் சமுத்திரக்கனி.
இந்நிலையில் அவர் அப்பா படத்தை மலையாளத்தில் ரீமேக் செய்கிறார். சமுத்திரக்கனி இயக்கும் முதல் மலையாள படமான இதற்கு ஆகாச மிட்டாயீ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஜெயராம்
மலையாளத்தில் சமுத்திரக்கனி கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்க உள்ளார். இது வரலட்சுமி நடிக்கும் இரண்டாவது மலையாள படம் ஆகும்.
வரலட்சுமி
இது குடும்ப படம். நான் ஜெயராம் சாரின் மனைவியாக நடிக்கிறேன். நான் ஜெயராம் சாரின் தீவிர ரசிகை. அவருடன் சேர்ந்து நடிப்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் வரலட்சுமி.
சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி சார் அண்மையில் தான் இந்த படத்தில் நடிக்க கேட்டார். யோசிக்காமல் சரி என்று கூறினேன். அவர் படங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
கதை
சமுத்திரக்கனி சார் இயக்கத்தில் நடிக்க ஆவலாக உள்ளேன். மலையாள ரசிகர்களுக்கு ஏற்ப கதையில் சில மாற்றங்களை செய்துள்ளார் சமுத்திரக்கனி சார். ஏப்ரல் 1ம் தேதி முதல் நான் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன் என வரலட்சுமி கூறியுள்ளார்.