twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆபாசப் படத்திலிருப்பது நானல்ல..! - மறுக்கும் வசுந்தரா

    By Shankar
    |

    ஆபாசப் படம் மற்றும் வீடியோவிலிருப்பது நானல்ல என்று நடிகை வசுந்தரா மறுப்பு தெரிவித்துள்ளார்.

    வட்டாரம், ஜெயம் கொண்டான், பேராண்மை படங்களில் நடித்தவர் வசுந்தரா. தேசிய விருது பெற்ற தென் மேற்கு பருவக்காற்று படத்தில் இவர்தான் நாயகி.

    சமீபத்தில் ரிலீசான சொன்னா புரியாது, சித்திரையில் நீலாச்சோறு படங்களிலும் நாயகியாக நடித்தார்.

    Vasundhara denies her nude photos

    வசுந்தரா ஒரு ஆணுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச படங்கள் இணையதளத்தில் வெளியானது. இவற்றை அவரே செல்பியாக எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.

    அவரது ஆபாச வீடியோவும் இணையத்தில் வெளியானது. இவை சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவின.

    Vasundhara denies her nude photos

    வசுந்தரா இவற்றைப் பார்த்து அதிர்ச்சியானார். தனது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் கணக்குகளை உடனடியாக மூடினார். மொபைல் போனையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.

    தற்போது இந்த ஆபாச படம் குறித்து கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறும் போது, "இன்டர் நெட்டில் வெளியான ஆபாச படத்தில் இருப்பது நான் அல்ல.

    Vasundhara denies her nude photos

    மார்பிங் மூலம் எனது முகத்தை நிர்வாண படத்துடன் இணைத்து இதை வெளியிட்டு உள்ளனர். இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை போலீசார் கடுமையாக தண்டிக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.

    English summary
    Actress Vasunthara has denied that she never appear in nude pictures and those are morphed by somjeone.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X