Don't Miss!
- Lifestyle ஃபேஸ்க்கு என்ன பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உங்க மனைவியை எப்போ கர்ப்பமாக்குவீங்கன்னு ஹீரோவை கேட்க வேண்டியது தானே?: வித்யா பாலன்
மும்பை: திருமணமான நடிகையை பார்த்தால் இன்னும் குழந்தை பெறவில்லையா என்று கேட்போர் உங்களின் மனைவியை எப்பொழுது கர்ப்பமாக்குவீர்கள் என நடிகர்களை கேட்க வேண்டியது தானே என பாலிவுட் நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் வித்யா பாலன். அவர் நடித்துள்ள கஹானி 2 படம் இன்று ரிலீஸாகி உள்ளது.
இந்நிலையில் வித்யா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
நடிகைகள்
பேட்டிகளின்போது என் திருமண வாழ்க்கை மற்றும் நான் எப்பொழுது குழந்தை பெறப் போகிறேன் என்று மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். திருமணமான நடிகர்களும் உள்ளனர். அவர்களிடம் போய் உங்கள் மனைவியை எப்பொழுது கர்ப்பமாக்குகிறீர்கள் என்று யாரும் கேட்பது இல்லை.
நடிகை
நடிகர்களிடம் உங்களின் திருமண வாழ்வு எப்படி உள்ளது என்று கூட யாரும் கேட்பது இல்லை. திருமணமான பெண் என்பதை தாண்டி எனக்கென ஒரு அடையாளம் உள்ளது.
சித்தார்த்
என் வாழ்வில் நான் தான் மிகவும் முக்கியமான நபர் என்று கூறினால் மக்கள் ஒரு மாதிரி பார்க்கிறார்கள். திருமணமானதால் சித்தார்த் தான் முக்கியம் என்று நான் கூற வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
டோன்ட் கேர்
சித்தார்த்தை நான் மிகவும் நேசிக்கிறேன். ஆனாலும் என் வாழ்வில் நான் தான் முக்கிய நபர். இப்படி சொல்வதால் நான் சுயநலவாதி என மக்கள் நினைத்தால் அதை பற்றி எனக்கு கவலை இல்லை.