Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கண்ணா லட்டு தின்ன ஆசையா: திருமண பந்தத்திற்குள் நுழையும் விசாகா சிங்?
சென்னை: நடிகை விசாகா சிங்கிற்கு விரைவில் திருமணமாகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிடிச்சிருக்கு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் விசாகா சிங். பிடிச்சிருக்கு படம் காலை வாரினாலும் சில ஆண்டுகள் கழித்து தமிழில் இவர் மீண்டும் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா ஹிட்டடித்தது.
சேது, சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் இணைந்து நடித்திருந்த இப்படம் விசாகா சிங்கிற்கும் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான வாலிப ராஜா, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படங்கள் பெரியளவில் எடுபடவில்லை.
இந்நிலையில் தனது நீண்ட நாள் காதலரை விசாகா மணம் புரியப் போவதாக தகவல்கள் அடிபடுகின்றன. விசாகாவின் காதலர் விக்ராந்த் ராவ் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒன்றின் விளம்பரப்பிரிவு அதிகாரியாக பணி புரிகிறார்.
ரோம் நகரத்தில் பணிபுரியும் விக்ராந்த்-விசாகா இருவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக இருந்து வருகின்றனர்.
தற்போது இவர்களின் நட்பு, காதலாக மாறியுள்ளது. விக்ராந்த் குறித்து விசாகா '' விக்ராந்த் பழகுவதற்கு இனிமையானவர்.எனது காதல் எப்போதோ தொடங்கி விட்டது.
இப்போது மிகவும் ஆழமாக நடந்துகொண்டிருக்கிறது. எங்கள் காதல் குழந்தை பருவத்தில் இருந்தே தொடங்கிவிட்டது. அவர் மிகவும் கனிவானவர். அவரை காதலனாக அடைந்தது எனது அதிர்ஷ்டம்.
என் வாழ்வில் இன்னொருவரை காதலனாக ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை'' என்று கூறியிருக்கிறார். விரைவில் இருவரின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.