Don't Miss!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தனது டிரைவரின் மகளின் 'ஹனிமூன்' செலவை ஏற்ற நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ்
மும்பை: இந்தி நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் தனது கார் டிரைவரின் மகள் தேனிலவுக்கு துபாய் செல்ல பணம் கொடுத்துள்ளார்.
நடிகர், நடிகைகள் தங்களிடம் வேலை செய்பவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் பேசுவது அவர்களுக்கு உதவி செய்வது அதிகரித்து வருகிறது. அஜீத் குமார் தன்னிடம் வேலை செய்யும் ஆட்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கிறார்.
இந்நிலையில் இந்தி நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் தனது டிரைவரின் மகளுக்கு உதவி செய்துள்ளார்.
டிரைவர்
ராம் பாபு என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக ஜாக்குலின் பெர்ணான்டஸிடம் கார் டிரைவராக உள்ளார்.
திருமணம்
ராம் பாபுவின் மகளுக்கு அண்மையில் திருமணம் முடிந்தது. புதுமணத் தம்பதிக்கு ஜாக்குலின் பரிசுப் பொருளாக எதையும் அளிக்க விரும்பவில்லை. மாறாக வேறு ஏதாவது செய்ய விரும்பினார்.
தேனிலவு
ராம் பாபுவின் மகளும், மருமகனும் துபாயில் தேனிலவு கொண்டாடுவதற்கான செலவை ஏற்றுக் கொண்டுள்ளார் ஜாக்குலின். அவர்கள் ஒரு வாரம் துபாயில் தங்கி தேனிலவை கொண்டாடுகிறார்கள்.
மகிழ்ச்சி
என் மகளுக்கு துபாய் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. இந்நிலையில் மேடம் என் மகள் துபாயில் தேனிலவு கொண்டாட பண உதவி செய்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது என்றார் ராம் பாபு.
சல்மான்
சல்மான் கானும், ஜாக்குலின் பெர்ணான்டஸும் காதலிப்பதாக பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது. சல்மானும் தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு உதவ தயங்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது.