Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
இப்ப பதில் சொல்லுங்கள்: ஆதாரத்தோடு மோடியை கேள்வி கேட்கும் கவுதமி #JusticeForAmma
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் பற்றிய கேள்விகளுக்கு மட்டும் பிரதமர் மோடி ஏன் பதில் அளிக்காமல் உள்ளார் என நடிகை கவுதமி கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி நடிகை கவுதமி பல கேள்விகள் கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். ஆனால் பிரதமர் அலுவலகமோ தங்களுக்கு எந்த கடிதமும் வரவில்லை என்கிறது.
நான் கேட்ட கேள்விகளுக்கு ஏன் பதில் இல்லை எனக் கேட்டு கவுதமி அறிக்கை வெளியிட்டார். அதை பார்த்த நெட்டிசன்களோ, சாதாரண குடிமக்களுக்கு பதில் அளித்துக் கொண்டிருப்பது தான் பிரதமரின் வேலையா என்றார்கள்.
இந்நிலையில் மோடி சாதாரண குடிமகனுக்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ளதை மேற்கோள் காட்டி கவுதமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
மாண்புமிகு PM @narendramodi குடிமக்களின் ட்வீட்களுக்கு பதில் அளிக்கிறார் பின் ஏன் #JusticeForAmma #JusticeForTN பதிலில்லை ?
— Gautami (@gautamitads) February 8, 2017
முக்கியமில்லையா? pic.twitter.com/dwYWWhoLWc
மாண்புமிகு PM @narendramodi குடிமக்களின் ட்வீட்களுக்கு பதில் அளிக்கிறார் பின் ஏன் #JusticeForAmma #JusticeForTN பதிலில்லை ?
முக்கியமில்லையா? என கேட்டுள்ளார்.