Don't Miss!
- News அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியிலிருந்து நீக்க கோரிய வழக்கு! மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
மீண்டும் "தாயாக" தயாராகிறார் ஏஞ்சலீனா...!
லண்டன்: பிரபல ஹாலிவுட் ஜோடியான ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் இருவரும், தற்போது நான்காவது குழந்தையை சிரியாவில் இருந்து தத்தெடுத்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட் ஜோடிக்கு ஏற்கனவே 6 குழந்தைகள் உள்ளனர். இவர்களில் ஒரு குழந்தை பெற்றெடுத்தது. மற்ற 3 குழந்தைகள் கம்போடியா, வியட்நாம் மற்றும் எத்தியோப்பியா நாடுகளில் இருந்து தத்தெடுக்கப்பட்டவை ஆகும்.
இந்நிலையில், அகதிகளுக்கான ஐ.நா-வின் சிறப்பு தூதுவராக நியமிக்கப்பட்ட ஏஞ்சலினா, உள்நாட்டு போரில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவிற்கு பலமுறை பயணம் மேற்கொண்டார்.
அப்போது அங்கு போரினால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகளைப் பார்த்து மனம் வருந்தினார் ஏஞ்சலினா. அக்குழந்தைகளுக்கு தனிப்பட்ட முறையில் தன்னாலான உதவியை செய்ய நினைத்தார். அதன்படி, தற்போது சிரியாவைச் சேர்ந்த பெண் குழந்தையை தனது 7வது குழந்தையாக தத்தெடுக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் தகவலை ஏஜ்சலினா - பிராட் பிட் ஜோடியின் நெருங்கிய நண்பர் ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
புற்று நோய் உடலின் மற்ற உறுப்புகளுக்கும் பரவாமல் தடுக்க தனது இரண்டு மார்பகங்களையும் அகற்றிவிட்ட ஏஞ்சலினா, இனிமேல் குழந்தை பெற்றுக்கொள்ள போவது இல்லை எனவும் முன்பே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.