Don't Miss!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
என் பட கதையை யாராலும் காப்பியடிக்க முடியாது: தொடையைத் தட்டும் இயக்குனர்
லாஸ் ஏஞ்சல்ஸ்: தனது கதையை யாராலும் காப்பியடிக்கவே முடியாது என்று ஸ்பெக்டர் எனும் ஜேம்ஸ் பாண்ட் பட இயக்குனர் சாம் மென்டீஸ் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜேம்ஸ் பாண்ட் டேனியல் கிரைக் நடித்து வரும் பாண்ட் படம் ஸ்பெக்டர். 24வது ஜேம்ஸ் பாண்ட் படமான ஸ்பெக்டரை சாம் மென்டீஸ் இயக்கி வருகிறார். இதில் கவர்ச்சி நாயகி மோனிகா பெலுச்சி நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நாவல்
இயான் பிளெமிங் எழுதிய நாவலைத் தழுவி ஸ்பெக்டர் படத்தை எடுத்து வருகிறார்கள்.
வில்லன்
மாஃபியா ஏஜென்சி நடத்தி வரும் வில்லன் உலக நாடுகளின் ராணுவத்திற்கே தண்ணீர் காட்டுகிறார். வில்லனை ஸ்பெக்டர் என்ற ஏஜென்சி நடத்தி வரும் நம்ம பாண்ட் கிரேக் எப்படி அடக்குகிறார் என்பது கதை.
சீக்ரட் சர்வீஸ் இல்லையா?
ஜேம்ஸ் பாண்ட் தனியாக ஏஜென்சி வைத்துள்ளாரா, அவர் இங்கிலாந்தின் ரகசிய போலீஸாக அல்லவா இருந்தார் என்று கேட்பவர்களுக்கு படத்தில் பதில் உள்ளதாம்.
மசாலா தூக்கல்
வழக்கம் போல இந்த ஜேம்ஸ் பாண்ட் படத்திலும் சிலு சிலு காதல், பரபர சண்டை, சேசிங் காட்சிகள் உள்ளதாம். ஆனால் சாம் மென்டீஸ் மசாலாவை கொஞ்சம் தூக்கலாக சேர்த்துள்ளாராம்.
ஹேக்
அண்மையில் ஹேக்கர்கள் சோனி நிறுவன கம்ப்யூட்டர்களை ஹேக் செய்தபோது ஸ்பெக்டர் கதையும் சுடப்பட்டது. ஆனால் சாம் மென்டீஸோ கொஞ்சமும் பதட்டம் அடையாமல் தனது கதையை யாராலும் திருட முடியாது. அவர்கள் ஹேக் செய்தால் என்ன என்று கூலாக கேட்கிறார்.