Don't Miss!
- News போலி பத்திரங்களை ரத்து செய்ய முடியுமா, முடியாதா? உயர்நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்ட மாற்றம் என்ன?
- Technology தல தோனியே சொல்லிட்டார்.. இது Smartwatch இல்லை குட்டி போன்னு.. பார்க்கதான் காஸ்ட்லீ.. ஆன ரேட் ரொம்ப கம்மி..
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பணம் மட்டும் போதாது... அடுத்த தலைமுறையை பற்றி யோசிக்கிறேன்!- அர்ஜுன்
எல்லோருக்கும் சமமான கல்வி வேண்டும், பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு கல்வி விஷயத்தில் இருக்க கூடாது என்ற உயரிய கருத்தை ஜெய்ஹிந்த் - 2 படம் மூலம் சொன்னதற்காகவும், படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததற்காகவும் தெம்பாக இருக்கிறார் அர்ஜுன்.
அவருடன் ஒரு மினி பேட்டி:
தனியார் பள்ளிக் கூடங்களை எல்லாம் அரசுடமையாக்க வேண்டும் என்ற கருத்தை சொல்ல காரணம் என்ன?
மே மாதம் வந்தாலே நிறைய பெற்றோர்கள் ஸ்கூல் பீஸ் கட்ட ஆலாய்ப் பறக்கிறதைப் பார்த்திருக்கிறேன். சினிமா தொழிலாளர்கள் நிறைய பேர் பீஸ் கட்ட உதவி கேட்டு வருவதை தொடர்ந்து கவனிக்கிறேன். பாவமாக இருக்கும். முடிந்தவரை உதவி செய்வேன்.
கல்விங்கிறது அடுத்த தலைமுறையினரின் வளர்ச்சி. ஒருத்தனின் வளர்ச்சியையும், வருங்காலத்தையும் பணம் என்கிற காரணத்தைக் காட்டி தடுக்க நினைப்பது பாவமில்லையா!
வசதியான வீட்டில் பிறந்த குழந்தைகளை விட ஏழை குழந்தைகள் புத்திசாலிகளாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அந்த ஏழை குழந்தைக்கும் கல்வி இலவசமாக கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இந்த பதிவு.
சொல்ல வந்த கருத்தை இன்னும் அழுத்தமாக பதிவு செய்திருக்கலாமே என்று தோன்றியதுண்டா?
உண்மைதான்.. நல்ல கருத்தை நல்ல கருத்தாக சொல்ல முற்பட்டால் டாக்குமென்டரி பீலிங் வந்துவிடும். அதற்காகத்தான் கமர்ஷியல் பார்முலாவை கொஞ்சம் அதிகமாகப் புகுத்தினேன். அதுதான் இன்று வெற்றியை கொடுத்திருக்கிறது.
நான் வெறும் நடிகனாக மட்டும் யோசிக்க வில்லை. இரண்டு பெண்களுக்கு தகப்பனாகவும் யோசித்தேன்.. வசதி இருந்ததால்தான் என் மகள்களைப் படிக்க வைத்தேன்.. வசதி இல்லாமலிருந்திருந்தால்? அதனால்தான் நான் அடுத்த தலைமுறையைப் பற்றி யோசிக்கிறேன்.
ஜெய்ஹிந்த் - 2 அனுபவம் எப்படி?
ஒன் மேன் ஆர்மி என்பார்களே! அப்படிதான் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என நான்கு பக்கம் யோசிக்க வேண்டும். தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மூன்று மொழிக்காகவும் உழைக்க வேண்டும் அப்பாடா என்று ஆகிவிட்டது. படம் வெளியாகி வெற்றி என்று ஆன பிறகு பட்ட கஷ்டமெல்லாம் சந்தோஷமாகி விட்டது.
அடுத்த படம் பற்றி ...
நிறைய பெற்றோர்கள் ஜெய்ஹிந்த் -2 படத்தைப் பார்த்து பாராட்டுகிறார்கள் . அதனால் அடுத்தும் வேறொரு அழுத்தமான கதைக் களத்தோடு விரைவில் துவங்க உள்ளோம்.
பணம் மட்டுமே நிறைவை தராது. சமூகத்துக்கு நல்லதை சொல்லவேண்டும் என்ற எண்ணத்தை செயல்படுத்த போகிறேன்." என்கிறார் அர்ஜுன்.