Don't Miss!
- Sports MI vs CSK : சிஎஸ்கேவை தோற்கடிச்சே ஆகணும் இல்லைனா.. வெறி கொண்டு சுற்றும் மும்பை இந்தியன்ஸ்
- News பொறியில் மாட்டிய பாஜக முக்கிய நிர்வாகி.. ரூ. 4 கோடி கைமாறியது எப்படி? தோண்டித் துருவும் போலீசார்!
- Lifestyle சரவணபவன் ஹோட்டல் ஸ்டைல் தக்காளி சட்னியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology ஜியோ தலையில் இடி.. அடி வைக்கும் எலான் மஸ்க்.. சாட்டிலைட் இன்டர்நெட்.. வயிற்றில் புளியை கரைக்கும் ஸ்டார்லிங்க்!
- Automobiles ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அப்படி யாருதாங்க வாங்குவது? சேல்ஸ் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டுது!!
- Education மாணவர்கள் குஷி...சென்னை பல்கலை.யில்ஏப்.15 முதல் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...!!
- Finance பில்லியனர் பட்டியலில் இருந்து தூக்கியெறியப்பட்ட டொனால்டு டிரம்ப்..!
- Travel 'சிரட்டைக் கின்னரி' இருக்கும் குடைவரை கோவில் எங்கு உள்ளது தெரியும்?
பரஞ்சோதி’ டூ ‘பரமன்’... சௌந்தரராஜா ரொம்ப ஹேப்பி!
'சுந்தரபாண்டியன்' படத்தில் சசிக்குமாரின் நண்பராக அறிமுகம் ஆனவர் நடிகர் சௌந்தரராஜா.
அதன்பின் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ஜிகர்தண்டா' என வலம் வந்தவருக்கு, காமெடி மன்னன் கவுண்டமணியுடன் நடித்த, 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது', திரைப்படம் கதாநாயகன் புரமோஷன் கொடுத்தது.
ஒரு கனவு போல
சௌந்தர ராஜா இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் திரைப்படம், ‘ஒரு கனவு போல' வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
அதற்கு முன்னால் சௌந்தர ராஜா வில்லனாக நடித்திருக்கும், ‘தங்க ரதம்' திரைப்படம் வெளியாகி அவருக்கு பெரு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
தங்கரதம்
இது பற்றி சௌந்தர ராஜா கூறுகையில், ‘இப்போது வெளியாகியுள்ள ‘தங்க ரதம்' படத்தில் கதாநாயகியின் அண்ணனாக வில்லனாக நடித்திருக்கிறேன். படம் பார்த்த சினிமாத்துறை நண்பர்களும், பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறை நண்பர்களும் மற்றும் பொதுமக்களும் என் தோற்றம் மற்றும் நடிப்பு மிக சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள். மிக மிக சந்தோஷமாக இருக்கிறேன். ‘தங்க ரதம்' இயக்குநர் பாலமுருகன் மற்றும் படக்குழுவிற்கு என் நன்றி.
வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு
என்ஜினியரிங் படித்த நான் வெளிநாட்டு வேலைகளை விட்டுவிட்டுத்தான் சினிமாவிற்கு வந்தேன். அதனால் எந்த இமேஜும் வைத்துக்கொள்ளாமல் கிடைத்த கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்தேன். என் முகம் ஓரளவுக்கு அனைவருக்கும் தெரிந்தபின் தேர்ந்தெடுத்து நடிக்கலாம் என்று நினைத்தேன். இப்போது ஓரளவு அனைவருக்கும் பரிச்சயமான நடிகனாக இருக்கிறேன் என்று நம்புகிறேன்.
இனி...
‘தங்க ரதம்' படத்தில் என் நடிப்பிற்கு கிடைத்துள்ள பாராட்டு எனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்திருக்கிறது. அந்த உற்சாகம் இனிமேல் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆர்வத்தை தந்திருக்கிறது.
பரஞ்சோதி டு பரமன்
'பரஞ்சோதி'யாக சுந்தரபாண்டியனில் ஆரம்பித்த என் பயணம், 'பரமனாக' ‘தங்க ரதம்' படத்தில் வளர்ந்திருக்கிறது என்று நம்புகிறேன். மகிழ்கிறேன்.
என்னை பாராட்டி உற்சாகப்படுத்தி நான் வளர உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.