Don't Miss!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சந்திப்போமா?
பிரியமுடன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த கெளசல்யா, இப்போது திருமலை படத்தில் அவருக்குஅண்ணியாக படத்தில் நடிக்கிறாராம்.
முன்பெல்லாம் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்த பல நடிகைகள் பின்னாளில் அவருக்கு அம்மாவாக, அக்காவாக,அண்ணியாக நடித்துள்ளனர். அதேபோல ரஜினிக்கு ஜோடியாக நடித்த சில நடிகைகள் அவருக்கு அம்மாவாகநடித்துள்ளனர்.
அந்த பாரம்பரியத்தை இப்போதைய இளம் நடிகர்களில் முதல் முறையாக தொடங்கி வைத்துள்ளார் விஜய்.
விஜய்யுடன் பிரியடன், நேருக்கு நேர் ஆகிய படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த கெளசல்யா இப்போதுபெங்களூரில் உள்ள தனது வீட்டில் சும்மா இருக்கிறார்.
சொந்த மொழியான கன்னடமும் கை கொடுக்கவில்லை. இதனால் சோலை விளம்பரங்களில் நடித்துவிட்டுமலையாளத்தில் சில படங்களில் நடித்தார். அங்கும் நினைத்தபடி சான்ஸ்கள் வரவில்லை.
இதனால் சும்மா இருப்பதைவிட ஓல்டு கெட் அப் வேடங்களைச் செய்யத் தயாரான அவர் முதலில் முயற்சி செய்ததுதமிழில் தான். முயற்சிக்கு கை மேல் பலனான திருமலை பட சான்ஸ் கிடைத்துவிட்டது.
இந்தப் படத்தில் விஜய்க்குஅண்ணியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
அண்ணியாக நடிப்பதில் எந்த வருத்தம் எனக்கு இல்லை என்கிறார் கெளசல்யா, தொடர்ந்து அஜீத், பிரசாந்த்,சூர்யா என எல்லா இளம் நடிகர்களுக்கும் அண்ணி, அக்கா வேடத்தில் நடிக்கத் தயார் என்றும் கூறுகிறார்.
கெளசல்யாவுக்கு வருத்தம் இருக்கிறதோ இல்லையோ அவரது ரசிகர்கள், ரசிகைகளுக்கு இது நிச்சயம் வருத்தம்தரும் தான்.
எப்படியோ தமிழுக்கு இன்னொரு அழகிய அண்ணி கிடைத்துவிட்டார்.