Don't Miss!
- News ஐஏஎஸ் அதிகாரி அதுல் ஆனந்தின் மகள் கலெக்டர் ஆகிறார்.. 4வது முயற்சியில் பிரம்மாண்ட வெற்றி
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Lifestyle உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நான் சாமியாராவது விதி என்றால் யாரால் தடுக்க முடியும்... சிம்பு பரபரப்புப் பேட்டி
சென்னை: நான் சாமியாராக வேண்டும் என்று விதி இருந்தால் நடந்து விட்டுப் போகட்டுமே என்று பரபரப்பாக பேசியுள்ளார் நடிகர் சிம்பு.
நடிகர் சிம்புவின் சமீப கால போக்கு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. சாமியார்கோலத்தில் ஊர் சுற்றுகிறார். இமயமலைக்குப் போகிறார்.
அதேசமயம் நடிகை ஹன்சிகாவையும் காதலிக்கிறார் என்று பேச்சுக்கள் அடிபடுகின்றன. இதுகுறித்து தினத்தந்திக்கு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார் சிம்பு. அதிலிருந்து சில பகுதிகள்...
யாருடனும் காதல் இல்லை
எனக்கு இப்போது யாருடனும் காதல் இல்லை. காதல் இருந்தால், அதை வெளியே சொல்கிற தைரியம் எனக்கு உண்டு.
ஹன்சிகாவை விமான நிலையம் வரை...
ஹன்சிகாவை விமான நிலையம் வரை சென்று நான் வழியனுப்புவதாக சொல்வது, கேட்பதற்கு, ‘காமெடி'யாக இருக்கிறது.
யார் வந்தாலும் ஏற்பேன்
ஹன்சிகா மட்டுமல்ல, எந்த பெண்ணாக இருந்தாலும் சரி, என்னுள் இருக்கும் ஆத்மா ‘சரி' என்று சொன்னால், அவரது காதலை ஏற்றுக்கொள்வேன்.
மண்டை சொல்வதைக் கேட்பதில்லை
சமீபகாலமாக மனதளவில் நான் பக்குவப்பட்டு விட்டேன். மண்டையும், மூளையும் சொல்வதை கேட்பதில்லை. உள்ளுக்குள் இருக்கும் ஆத்மா சொல்கிறபடி நடக்கிறேன்.
திருமணம் எப்போது
எனது திருமணம் எப்போது நடக்கும் என்று சொல்ல முடியாது. நான் சமீபகாலமாக எதையும் திட்டமிடுவதில்லை.
சாமியார் ஆனால் ஆகட்டுமே
ஆன்மிகத்துக்கு போனால், சாமியார் ஆகிவிட வேண்டுமா என்ன? நான் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருப்பது உண்மை. ஆனால், சாமியார் ஆகவில்லை. ஒருவேளை நான் சாமியார் ஆக வேண்டும் என்று விதியிருந்தால், அப்படி நடந்துவிட்டுப் போகட்டும்.
வாலு எப்போ...?
வாலு படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்னும் கொஞ்சம்தான் பாக்கி. அதை சீக்கிரமே முடித்து விடுவோம். அடுத்து அந்த படம்தான் திரைக்கு வரும் என்று கூறியுள்ளார் சிம்பு.