Don't Miss!
- News பாஜகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது.. மோடி எடுத்த இறுதி அஸ்திரம்.. புட்டு புட்டு வச்சிட்டாரே.. போச்சு
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Finance புதிய EV கொள்கை.. சீனாவுக்கு மட்டும் செக்..!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விஜய் கேட்டதும் டேப் ரிக்கார்டருன் ஓடோடி வந்த இமான்
சென்னை: விஜய்யின் ஜில்லா படத்திற்கு இசையமைப்பது குறித்து இமான் மனம் திறந்துள்ளார்.
விஜய் நடித்த தமிழன் படம் மூலம் கோலிவுட்டில் இருவர் அறிமுகமானார்கள். அதில் ஒருவர் பிரியங்கா சோப்ரா மற்றொருவர் இசையமைப்பாளர் டி. இமான்.
தமிழன் படத்திற்கு பிறகு இமான், விஜய் கூட்டணி பல காலம் சேரவே இல்லை. இந்நிலையில் தான் இந்த கூட்டணி ஜில்லாவில் சேர்ந்துள்ளது. இது குறித்து இமான் கூறுகையில்,
ஜில்லாவுக்கு வருகிறீர்களா?
விஜய் சார் போன் செய்து நாம் ஜில்லாவில் ஒன்றாக சேர்ந்து பணியாற்றலாமா என்று கேட்டார் என்று இமான் தெரிவித்தார்.
வாய் விட்டு சிரித்த விஜய்
அவர் கேட்ட மாத்திரத்தில் டேப் ரிக்கார்டருடன் விஜய்யை பார்க்க சென்றுவிட்டேன். என்னை பார்த்த உடன் விஜய் வாய் விட்டு சிரித்தார். தமிழன் படத்தின்போது இருந்த மாதிரியே இருக்கிறீர்கள், கொஞ்சமும் மாறவில்லை என்று விஜய் கூறினார் என்றார் இமான்.
சான்ஸ் கேட்கவில்லை
தமிழன் படத்திற்கு பிறகு நான் விஜய்யிடம் வாய்ப்பு கேட்கவில்லை. நாங்கள் நிச்சயம் சந்திப்போம் என்று நம்பினேன். அது நடந்ததில் மகிழ்ச்சி என்று இமான் கூறினார்.
நடிக்க வருவீர்களா?
இளம் இசையமைப்பாளர் நடிக்க வருகிறார்களே, நீங்களும் வருவீர்களா என்று கேட்டதற்கு, இமான் கூறுகையில், நல்ல இசையமைப்பாளர் என்ற அடையாளம் மட்டுமே எனக்கு வேண்டும். நான் இசையை விரும்புபவன். தொடர்ந்து நல்ல இசையை அளிக்க விரும்புகிறேன் என்றார்.