Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சஞ்சய் தத்துக்கு சலுகை காட்டக் கூடாது.. இனி அவருடன் நடிக்கவும் மாட்டேன்!- நானா படேகர் அதிரடி
அவர் இயல்பான நடிப்புக்குச் சொந்தக்காரரும் பத்ம விருது பெற்றவருமான நானா படேகர்.
ஆரம்பத்தில் தீர்ப்பை ஏற்று சிறைக்குச் செல்வதாகக் கூறிய சஞ்சய் தத், பின்னர் அவகாசம் கேட்டுப் பெற்றதும், இப்போது தண்டனையையே ரத்து செய்யக் கோருவதும் நானா படேகர் போன்றவர்களை கொதிப்படைய வைத்துள்ளது.
இதுகுறித்து நானா படேகர் கூறுகையில், "சஞ்சய் தத் செய்தது மிகப் பெரிய குற்றம். அது நீதிமன்றத்தில் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பிறகு ஏன் அவருக்கு கருணை காட்ட வேண்டும்? அவருக்கு மட்டும் என்ன சிறப்புச் சலுகை வேண்டியிருக்கிறது? கண்டிப்பாக ஜெயில் தண்டனையை சஞ்சய் தத் அனுபவித்தே தீர வேண்டும்.
சஞ்சய் தத்துடன் இனி எக்காலத்திலும் இணைந்து பணியாற்றவே மாட்டேன். அவர் படங்களை இனி பார்க்கக் கூட மாட்டேன். ஒரு இந்தியப் பிரஜையாக சஞ்சய் தத்துக்கு நான் தரும் தண்டனை இது. இதனால் அவர் திருந்துவாரா மாட்டாரா என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை," என்று கூறியுள்ளார்.
பாலிவுட்டையே அதிர வைத்துள்ளது நானாவின் இந்த அதிரடி பேட்டி.