twitter

    அங்காடித் தெரு கதை

    அங்காடித் தெரு, இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். கருணாமூர்த்தி மற்றும் அருண்பாண்டியன் ஆகியோரின் தயாரித்த இந்தப் படத்தை அய்ங்கரன் இன்டர்னேசனல் நிறுவனம் வெளியிட்டது. மகேசு, அஞ்சலி, இயக்குநர் வெங்கடேசு மற்றும் கனாக்காணும் காலங்கள் பாண்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகை சினேகா அவரது உண்மை ரூபத்திலேயே கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இசை விசய் ஆண்டனி மற்றும் சி. வி. பிரகாசு. பிரபல எழுத்தாளர் செயமோகன் இந்தப் படத்திற்கான வசனங்களை எழுதியுள்ளார். பிப்ரவரி 11, 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படம் மார்ச் 26, 2010ல் வெளியிடப்பட்டது.

    சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள பிரமாண்ட வணிக வளாகங்களில் பணிபுரியும் மக்களின் கொத்தடிமை வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டு இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் பெரும்பாலான காட்சிகள் அதே தெருவில் உள்ள கடைகளிளேயே எடுக்கப்பட்டுள்ளன. மேலும் சில காட்சிகள் சென்னை மற்றும் தேனி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளன.
    **Note:Hey! Would you like to share the story of the movie அங்காடித் தெரு with us? Please send it to us ([email protected]).