twitter

    கோலி சோடா கதை

    கோலி சோடா 2014ஆம் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை விஜய் மில்டன் இயக்கியுள்ளார். சேரனின் தயாரிப்பில் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் எட்டு வருடங்கள் கழித்து கோலி சோடா படத்தை இயக்கியுள்ளார். இவர் பிரியமுடன், வனயுத்தம், தீபாவளி, நெஞ்சினிலே, சாக்லெட், ஆட்டோகிராப், காதல், காதலில் விழுந்தேன், வழக்கு எண் 18/9, உட்பட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து உள்ளார். பசங்க திரைப்படத்தில் நடித்த 4 சிறுவர்கள் இந்த திரைப்படத்தில் கதாநாயகர்களாக நடித்துள்ளார்கள்.

    கதை 

    இக்கதை கோயம்பேடு சந்தையில் உள்ள நான்கு இளைஞர்களின் கதை. எதிர்காலத்தை பற்றி கவலைப்படாத நால்வர் எவ்வாறு எதிர்காலத்தை சிந்தித்து பல சவால்களை எதிர்கொண்டு வாழ்கையில் முன்னேறுகின்றனர் என்பதே கோலிசோடா.
    **Note:Hey! Would you like to share the story of the movie கோலி சோடா with us? Please send it to us ([email protected]).