இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (2013)(U)
Release date
02 Oct 2013
genre
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா கதை
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2012-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை ரௌத்திரம் படத்தை இயக்கிய கோகுல் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் அஷ்வின் கக்குமனு கதாநயகர்களகவும், நந்திதா மற்றும் சுவாதி ரெட்டி கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர்.
கதை
சுமார் மூஞ்சி குமாராக விஜய்சேதுபதி வருகிறார். அவருக்கும் எதிர் வீட்டு நந்திதாவுக்கும் ஒரு தலைக் காதல், எதிர்ப்பு, அதனால் பிரச்சனைகள் ஒரு புறம். பாலாவாக மங்காத்தாவில் நடித்த அஸ்வின், அவருக்கும் சுவாதிக்கும் காதல், அவரது வேலையின் பிரச்சனைகள், குடித்து விட்டு வண்டியை ஓட்டி ஒரு பெண்மணிக்கு விபத்து ஏற்படுத்தி விடுகிறார், உயிருக்கு போராடும் இந்த பெண்மணியை காப்பாற்ற வேண்டும்.
அஸ்வின் குடித்த ஒயின்சாப்பில் ஒரு கொலை நடக்கிறது. கொலையாளிகள் விஜய்சேதுபதி செல்போனை திருடி தப்பித்து விடுகின்றனர், உயிருக்கு போராடும் பெண்மணிக்கு விஜய்சேதுபதியின் அரிய வகை ரத்தம் தேவை. கொலை செய்த இடத்தில் இருந்ததால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் விபத்தில் சிக்கிய பெண்மணியின் கணவன்.
இவை எல்லாம் சரியாகி விஜய்சேதுபதியின் ரத்தம் பெண்மணிக்கு கிடைத்ததா, அஸ்வினின் காதல் என்னவானது, கொலையாளிகள் சிக்கினரா, செல்போன் விஜய்சேதுபதிக்கு திரும்ப கிடைத்ததா, விபத்தில் சிக்கிய பெண்மணியின் கணவர் தப்பித்தாரா என்பது தான் கதை.
**Note:Hey! Would you like to share the story of the movie இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா with us? Please send it to us ([email protected]).