twitter
    Tamil»Movies»Maari»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • சென்னையின் ஒரு ஏரியாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தாதா மாரி. புறா பந்தயம் விடுவது, ஏரியாவாசிகளிடம் மாமூல் வசூலிப்பதுதான் வேலை. அவனிடமிருந்து ஏரியாவைக் கைப்பற்ற லோக்கல் கோஷ்டி ஒரு நேரம் பார்த்து காத்திருக்கிறது. அதற்கு தோதாக வருகிறார் புது இன்ஸ்பெக்டர். அந்தப் பகுதிக்கு புதிதாகக் குடிவரும் காஜல் அகர்வாலைப் பயன்படுத்தி, ஒரு கொலை வழக்கில் மாரியை உள்ளே தள்ளுகிறார் இன்ஸ்பெக்டர்.

      அதன் பிறகு எல்லாமே தலைகீழாகிறது. எதிர்கோஷ்டி ஏரியாவை எடுத்துக் கொள்கிறது. ஏழுமாத சிறை வாசத்துக்குப் பிறகு வெளியில் வரும் மாரி, எப்படி ஏரியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான் என்பது மீதிக் கதை.

      தனுஷை பக்கா தாதாவாகக் காட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்திய பாலாஜி மோகன், ஹீரோயின், மெயின் வில்லன் இருவர் பாத்திரப்படைப்பிலும் கோட்டை விட்டிருக்கிறார்.