twitter
    Tamil»Movies»Puli»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • மனித உருவில் இருக்கும் அதிசக்தி வாய்ந்த வேதாளங்கள் மனித குலத்தை ஆட்டிப் படைக்கின்றன. இவர்களின் ராணியான ஸ்ரீதேவி 56 ஊர்களை ஆள்கிறார். இந்த ஊர்களில் வாழும் மக்களை துன்புறுத்தி, கொள்ளையடித்து வாழ்கின்றன வேதாளங்கள்.

      சர்வ சக்தி படைத்த வேதாளங்களையும், மாய தந்திரங்கள் தெரிந்த அவர்களின் ராணி ஸ்ரீதேவியையும் எப்படி வெல்கிறார் விஜய்? விஜய் உண்மையில் யார்? என்பதெல்லாம் மீதிக் கதை.

      அத்தனை சுலபத்தில் கிடைக்காத விஜய் கால்ஷீட், முதல் நிலை தொழில்நுட்பக் கலைஞர்கள், கொட்டிக் கொடுக்க தயாரிப்பாளர்கள் இருக்கும்போது, 'ச்சும்மா பூந்து விளையாடி' இருக்க வேண்டாமா சிம்பு தேவன்?