twitter

    ரஜினி முருகன் கதை

    ரஜினி முருகன் தமிழ் நகைச்சுவை, காதல் மற்றும் அதிரடி கலந்த மசாலா திரைப்படம். இப்படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்க சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரத்திலும் சூரி, சமுத்திரக்கனி மற்றும் ராஜ்கிரண் துணை கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்தினை திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைத்துள்ளார்.

    கதை :
        ரஜினி முருகன் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இருவரும் வேலையில்லாமல் ஊருக்குள் சுற்றித்திரிகின்றனர். ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ்-யை சந்திக்க பார்த்தவுடன் காதல் வருகிறது. ஆனால், கீர்த்தி சுரேஷ் அவரின் காதலை ஏற்க மறுக்கிறார். அதனால், கார்த்திகா (கீர்த்தி சுரேஷ்) வீட்டின் முன்பு சிவா கார்த்திகேயன் டீகடை போடுகின்றார். 

    பின்பு டீ கடையை காலி செய்துவிட்டு ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்ய தொடங்க, அதே ஊரினை சேர்ந்த சமுத்திரகனி அதற்காக பணம் கேட்டு மிரட்டுகின்றார். இங்கு ஆரம்பிக்கின்றது மோதல். 

    தன் வீட்டினை விற்றல் தான் தன்னுடைய வாழ்கையில் செட்டில் ஆகா முடியும் என்ற எண்ணத்தோடு வீட்டினை விற்க முற்சிக்கின்றார் சிவா கார்த்திகேயன். அதிலும் தனக்கு பங்கு வேண்டும் என்று நிற்கிறார் சமுத்திரகனி. இறுதியில்  அந்த வீட்டினை சிவா விற்றாரா..? அவரின் காதல் கை கூடியதா....? என்பதே மீதிகதை. 
    **Note:Hey! Would you like to share the story of the movie ரஜினி முருகன் with us? Please send it to us ([email protected]).