இயக்குநராக முதல் படம்... சில தடுமாற்றங்கள் தெரிந்தாலும் துணிச்சலான ஒரு கருத்தை, பலரும் சொல்லத் தடுமாறும் விஷயத்தை கையிலெடுத்ததற்காக பாராட்டுகள்.
தினம்தோறும் செய்தித் தாள்களில் பள்ளிக் குழந்தைகளின் பரிதாப மரணங்களைப் படித்துவிட்டுக் கடக்கிறோம். அந்த இழப்பு நமக்கு ஏற்படாத வரையில் அது வெறும் செய்திதானே! அந்த குழந்தைகள் இறப்பு வெறும் விபத்தால் நேர்ந்த மரணங்களா... அல்லது அலட்சியத்தால் நிகழ்ந்த படுகொலைகளா...? யாரும் யோசிப்பதில்லை, குழந்தையைப் பறிகொடுத்தவர்களைத் தவிர!
பல படைப்பாளிகளும் மறந்துவிட்ட, ஆனால் சமூகத்தின் பெரும் நோயாக தனியார் பள்ளிகளின் கொள்ளையை, அலட்சியக் கொலைகளைப் படமாக எடுத்த ஒரே காரணத்துக்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம்!
தினம்தோறும் செய்தித் தாள்களில் பள்ளிக் குழந்தைகளின் பரிதாப மரணங்களைப் படித்துவிட்டுக் கடக்கிறோம். அந்த இழப்பு நமக்கு ஏற்படாத வரையில் அது வெறும் செய்திதானே! அந்த குழந்தைகள் இறப்பு வெறும் விபத்தால் நேர்ந்த மரணங்களா... அல்லது அலட்சியத்தால் நிகழ்ந்த படுகொலைகளா...? யாரும் யோசிப்பதில்லை, குழந்தையைப் பறிகொடுத்தவர்களைத் தவிர!
பல படைப்பாளிகளும் மறந்துவிட்ட, ஆனால் சமூகத்தின் பெரும் நோயாக தனியார் பள்ளிகளின் கொள்ளையை, அலட்சியக் கொலைகளைப் படமாக எடுத்த ஒரே காரணத்துக்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம்!