twitter

    சுந்தர பாண்டியன் கதை

    சுந்தர பாண்டியன் 2012ல் சசிகுமார் தயாரிப்பிலும் நடிப்பிலும் வெளிவந்த திரைப்படமாகும். இதில் சூரி, இனிகோ பிரபாகரன், அப்புக்குட்டி, விஜய் சேதுபதி போன்றோர் நடித்துள்ளார்கள்.

    கதை:

    தன் நண்பன் அன்பு (இனிகோ பிரபாகரன்) நான்கு மாதங்களாய் ஒரு தலையாய்க் காதலித்து வரும் அர்ச்சனாவுடன்( லட்சுமி மேனன் ) அவரைச் சேர்த்து வைக்க முயல்கிறார் கண்டமனூர் பெரிய வீட்டுப் பையன் சுந்தரபாண்டியன் (சசிகுமார்). அர்ச்சனாவை சுந்திரபாண்டியனின் நண்பனின் நண்பனும் ஒரு தலையாகக் காதலிக்கிறான். நண்பனின் காதலை அர்ச்சனாவுக்குச் சொல்லப்போகும் சுந்தரபாண்டியனிடம் தான் அவரைத்தான் காதலிப்பதாக அர்ச்சனா சொல்கிறார். அதை அவரும் அவர் நண்பரும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் நண்பனின் நண்பன் (அப்புக்குட்டி) ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். அவர்களுக்குள் நடந்த சண்டையில் அவர் பேருந்திலிருந்து தவறி விழுந்து இறந்து விடுகிறார். அப்பழி சுந்தரபாண்டியன் மேல் விழுந்து அவர் சிறை செல்ல நேருகிறது. காதல் செய்தி பெண் வீட்டாருக்குத் தெரிந்துவிட அவருக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. அதன்பிறகு வரும் பிணக்குகளும் அவர்கள் எவ்வாறு இணைந்தார்கள் என்பதை சொல்லியிருக்கிறார், இயக்குனர்.
    **Note:Hey! Would you like to share the story of the movie சுந்தர பாண்டியன் with us? Please send it to us ([email protected]).