twitter

    தாரை தப்பட்டை கதை

    தாரை தப்பட்டை தமிழ் காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்க, சசிகுமார், வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. இத்திரைப்படம் கரகாட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

    கதை : 
      தஞ்சாவூரில் வசிக்கும் சன்னாசி (சசிகுமார்) கரகாட்டத்தை தொழிலாக கொண்டவர். அந்த கரகாட்ட குழுவில் உள்ள சூறாவளி (வரலக்ஷ்மி)-க்கு சன்னாசி மீது காதல். சன்னாசிக்கும் சூறாவளியை பிடித்தும் அதனை வெளிக்காட்டாமல் தன் கரகாட்ட குழுவிற்கு பாதுகாப்பாக இருக்கிறார். 

    நடுவில் கருப்பையா என்பவருக்கு சன்னாசி சூறாவளியை மணமுடித்து தருகிறார். மணமுடித்த கையுடன் சூறாவளி மாயமாகிறார். கரகாட்ட குழுவும் தடுமாறி பல பிரச்சனைகளை சந்திக்கின்றது. சூறாவளிக்கு என்ன ஆனது..? சன்னாசி தன் கரகாட்ட குழுவை மீட்டு பழைய நிலைமைக்கு திருப்பி கொண்டுவந்தாரா..? என்பதே மிகவும் உணர்ச்சிவசமான கதையாக இயக்குனர் தொடர்கிறார். 
    **Note:Hey! Would you like to share the story of the movie தாரை தப்பட்டை with us? Please send it to us ([email protected]).