twitter

    உன்னைப் போல் ஒருவன் கதை

    உன்னைப் போல் ஒருவன் 2009 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படம். சக்ரி டோலட்டியால் இயக்கப்பட்டு கமலஹாசன் மற்றும் மோகன்லால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ஒரு வெற்றிப் படம். இது நீராஜ் பாண்டே இயக்கத்தில் 2008 இல் வெளியான எ வென்னஸ்டே என்ற இந்தித் திரைப்படத்தின் தழுவல் ஆகும்.

    கதை:

    சென்னை காவல்துறை ஆணையரான ராகவ மராருக்கு (மோகன்லால்) மர்ம நபர் ஒருவர் போன் செய்கிறார் (கமல ஹாசன்). அந்த பெயர் கூறாத மர்ம நபர் சென்னை நகரத்தில் 5 இடத்தில் ஆர்.டி.எக்ஸ். வெடி குண்டு வைத்துள்ளதாக கூறுகிறார். அவர் கோரிக்கையான 4 தீவிரவாதிகளை குறிப்பிட்ட இடத்தில் விடுவிக்க வேண்டுமெனவும் இல்லையெனில் குண்டுகள் வெடிக்கும் எனவும் கூறுகிறார். இறுதியில் 4 தீவிரவாதிகளும் காவல் துறை அதிகாரிகளான ஆரிஃப் கான் (கணேஷ் வெங்கட்ராமன்) மற்றும் சேதுராமன் (பாரத் ரெட்டி) ஆகியோரின் பாதுகாப்புடன் மர்ம நபர் குறிப்பிட்ட இடமான விமான நிலையத்தில் விடுவிக்கப்படுகின்றனர். அதன் பின் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களும் அதற்கான காரணங்களும்தான் கதையின் முடிவு.
    **Note:Hey! Would you like to share the story of the movie உன்னைப் போல் ஒருவன் with us? Please send it to us ([email protected]).