twitter
    Tamil»Movies»Wagah»Story

    வாகா கதை

    வாகா விக்ரம் பிரபு நடிப்பில் அடுத்து வெளிவரகூடிய தமிழ் காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தினை ஜிஎன்ஆர் குமாரவேலன் இயக்க, டி இமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் விக்ரம் பிரபு ராணுவ வீராக நடித்துள்ளார்.

    கதை : 

    பாகிஸ்தான் சிறையில், கதை ஆரம்பிக்கின்றது. சிறையில், விக்ரம் பிரபு தன் பிளாஷ்பேகை கூற ஆரம்பிக்கிறார். கல்லூரி படித்துவிட்டு ஊரினை சுற்றிக்கொண்டிருக்கும் விக்ரம் பிரபுவை அவரின் அப்பா மளிகை கடையை பார்த்துக்கொள், ஊரை சுற்றாதே என எந்நேரமும் சொல்லிக்கொண்டே உள்ளார். 

    வீட்டில் அப்பாவின் திட்டுகளை தாங்க முடியாமல் ராணுவத்தில் சேருகிறார் விக்ரம் பிரபு. எல்லை பாதுகாப்பு ஏரியாவான வாகாவில் உயரமான இடத்தில் இருந்து எல்லைகளை ஊடுருவி பார்ப்பது தான் வேலை. பேச்சு துணைக்கு கூட ஆள் இல்லாமல், வெறுத்து போய் நிற்கும் பொழுது தான் விக்ரம் பிரபு, ஹீரோயினையை  பார்க்கிறார். பார்த்ததும் காதலில் விழ, அந்நேரம் பார்த்து பாகிஸ்தானில் உள்நாட்டு போர் வெடிக்கிறது.

    அதன் விளைவாக, பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படும் பொழுது தான் தெரிகிறது. அந்த பெண் பாகிஸ்தான் என்று. ஆகையால், எல்லையை தாண்டி சென்று அந்த பெண்ணை கரம் பிடிக்க நினைக்கிறார் விக்ரம் பிரபு. அதனால் தான் சிறை செல்கிறார். இறுதியில் சிறையை விட்டு வெளிவந்து காதலித்த தன் காதலியை கரம் பிடித்தாரா என்பதே மீதிக்கதை. 
    **Note:Hey! Would you like to share the story of the movie வாகா with us? Please send it to us ([email protected]).