twitter

    எய்தவன் கதை

    எய்தவன் இயக்குனர் சக்தி ராஜசேகரன் இயக்கத்தில், கலையரசன், சாண்டா டிடஸ், வேலா ராமமூர்த்தி, ஆப்பிருக்கலாம் நரேன் மற்றும் பலர் நடித்த அதிரடி திரைப்படம். இப்படத்திற்கு பார்த்தவ் பார்கோ இசையமைத்துள்ளார். 

    கதை : 

    கலையரசன் சென்னையில் தனெக்கென்று ஒரு சுயதொழில் செய்துகொண்டு அழகான குடும்பத்துடனும், சாய்னாவின் காதலுடனும் ஓர் அழகான வாழ்க்கையை வாழ்கிறார்.  கலையரசனின் தங்கை மருத்துவர் ஆகவேண்டும் என்று விருப்பப்பட்டு, கவுன்சிலிங் செல்கிறார். 

    கவுன்ஸிலிங் செல்லும் இடத்தில் அரசு கல்லூரியில் சீட் கிடைக்காததால், தனியார் கல்லூரிக்கு முயற்சிக்கின்றனர். அங்கு டொனேஷன் மட்டுமே ரூ 50 லட்சம் கேட்க, எப்படியோ கலையரசன் பணத்தை ரெடி செய்து கொடுக்கின்றார்.

    ஆனால், கல்லூரிக்கு தன் தங்கை சென்ற பிறகு தான் தெரிகின்றது, அந்த கல்லூரியின் உரிமை நீக்கப்பட்டது என்றும், தங்களது பணம் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும்.  தான் ஏமாந்த பணத்தை கேட்க செல்லும் இடத்தில் கலையரசன் பல அசம்பாவிதங்களை சந்திக்கின்றார்.

    அதை தொடர்ந்து தமிழகத்தின் முன்னணி மல்டி மில்லினியர் மற்றும் கல்லூரி நிர்வாக உரிமையாளர் கௌதம் தான் காரணம் என்று அறிந்து கொண்டு அவரை எப்படி எதிரத்து போராடி தனது பணத்தை மீட்டெடுக்கிறார் என்பதே மீதிக்கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie எய்தவன் with us? Please send it to us ([email protected]).