twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு பெண்ணுக்கு ஆண் தரும் சத்தியப் பாட்டு... இது கோச்சடையான் பாட்டு!!

    By Shankar
    |

    கோச்சடையான் இசை வெளியீட்டு விழா மார்ச் 9-ம் தேதி என்றாலும், படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள் ஒவ்வொன்றாக வெளியாக ஆரம்பித்துள்ளன.

    ஏற்கெனவே இரு பாடல்களைத் தந்துள்ளோம்.

    இதோ மூன்றாவது பாடல். இந்தப் பாடல், ஒரு பெண்ணுக்கு ஆண் செய்து தரும் சத்தியமாக அமைந்துள்ளது.

    வைரமுத்துவின் வரிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடலின் வரிகள்...

    காதல் கனியே உன்னைக் கைவிடமாட்டேன்

    சத்தியம் சத்தியம் இது சத்தியமே

    மாலை சூடிய காலைக் கதிரின் மேலே

    சத்தியம் சத்தியம் இது சத்தியமே...

    ஒரு குழந்தை போலே

    ஒரு வைரம் போலே

    தூய்மையான என் சத்தியம் புனிதமானது.

    இப்பிறவியில் இன்னொரு பெண்ணைச்

    சிந்தையிலும் தொடேன்

    பிறிதோர் பக்கம் மனம் சாயாப்

    பிரியம் காப்பேன்

    செல்லக் கொலுசின் சிணுங்கல் அறிந்து

    சேவை செய்வேன்

    நெற்றிப் பொட்டில் முத்தம் பதித்து

    நித்தம் எழுவேன்

    கைப்பொருள் யாவும் கரைந்தாலும்

    கணக்குக் கேளேன்

    ஒவ்வொரு வாதம் முடியும் போதும்

    உன்னிடம் தோற்பேன்

    சத்தியம் சத்தியம் இது சத்தியமே...

    மாதமலர்ச்சி மறையும் வயதில்

    மார்பு கொடுப்பேன்

    நோய் மடியோடு நீ வீழ்ந்தால்

    தாய் மடியாவேன்...

    -இதே போல ஆணுக்கு பெண் சத்தியம் செய்து தரும் பாடலும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது.

    English summary
    Here are the lyrics of another song from Kochadaiiyaan written by Vairamuthu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X