Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு சாதகம்
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
லிங்கா ஆடியோ உரிமையை ஏழு கோடிக்கு வாங்கியது ஈராஸ்!
ரஜினியின் லிங்கா படத்தின் இசை வெளியீட்டு உரிமையை ரூ 7 கோடிக்கு வாங்கியிருக்கிறது சவுந்தர்யா தலைமையிலான ஈராஸ் நிறுவனம்.
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இரு வேடங்களில் நடிக்கும் லிங்கா படம் ஷூட்டிங் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.
இந்தப் படத்தை பலத்த போட்டிக்கிடையில் ஈராஸ் நிறுவனம் ரூ 165 கோடிக்குப் பெற்றுள்ளது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்று வெளியாகிவிட்டது (ஒன்இந்தியாவில் நேற்றே செய்தி வெளியிட்டது நினைவிருக்கலாம்).
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு உரிமை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூ 7 கோடிக்கு ஈராஸ் நிறுவனத்துக்கே விற்கப்பட்டுள்ளது.
ஆடியோ விற்பனை என்பதே பூஜ்யமாகிவிட்ட இன்றைய சூழலில், லிங்கா இசைக்கு ரூ 7 கோடி தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஈராஸ் நிறுவனத்தின் தென்னகப் பிரிவு மற்றும் டிஜிட்டல் துறைக்கு சவுந்தர்யா ரஜினிதான் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் வரும் நவம்பர் 16-ம் தேதி சென்னை சத்யம் சினிமாஸில் வெளியாகின்றன.