Don't Miss!
- Finance 7.50 லட்சம் கோடி ரூபாயை நிதி திரட்டும் மத்திய அரசு.. எதற்காக தெரியுமா..?
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஈழத்து முதல் தமிழ்ப் பெண் இசைக் குயிலின் "குயின் கோப்ரா"... சென்னையில் வெளியானது
சென்னை: ஈழத்தின் முதல் தமிழ்ப் பெண் இசையமைப்பாளர் என்ற பெருமைக்குரிய பிரபாலினி பிரபாகரனின் ‘குயின் கோப்ரா' இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கங்கை அமரன், பாடகர் மாணிக்க விநாயகம், ஸ்ரீகாந்த் தேவா, பரமேஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குயின் கோப்ரா இசை ஆல்பத்தில் மொத்தம் எட்டுப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
பன்முகத் திறமையாளர்...
பிரபாலினி பாடகி, கவிஞர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், அறிவிப்பாளர் குறும் பட இயக்குனர் என்று பல துறைகளில் ஈடுபட்டு வரும் ஒரு இலங்கை தமிழ் மகள் ஆவார்.
இசையோடு, பாடகியாகவும்...
இவர், தனது குயின் கோப்ரா இசை ஆல்பத்திற்கு இசை அமைத்ததோடு, அதன் அனைத்துப் பாடல்களையும் மற்ற பாடகர்களோடு இணைந்துப் பாடவும் செய்துள்ளார்.
என்ன செய்தேன்...
இந்த ஆல்பத்தில், ‘என்ன செய்தேன் எனை திரும்பி பார்த்தாய்,
என்ன செய்தேன் எனைத் திருடி சேர்த்தாய்...
என்ன செய்தேன் எனை வருடி ஈர்த்தாய்
அறியாமல் தவித்தேனடா , புரியாமல் ரசித்தேனடா... ' என்றொரு பாடல் உள்ளது. இந்தப் பாடலை கிரீஷுடன் சேர்ந்து பாடியுள்ளார் பிரபாலினி.
இனிமை...
இந்த ஆல்பத்தில் உள்ள ஒவ்வொரு பாடலும் இனிமையாக இருப்பதாக பிரபாலினியின் பேஸ்புக் பக்கத்தில் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மெல்லிசை இன்பமும் கலந்த காலத்திற்கேற்ற படைப்பு என அவர்கள் பாராட்டியுள்ளனர்.
சர்வதேச அளவில்...
குயின் கோப்ரா தான் சர்வதேச அளவிலான முதல் இந்திய ஆல்பம் எனக் கூறப்படுகிறது.