Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எக்கோ நிறுவனத்தில் அதிரடி சோதனை... ரூ 25 லட்சம் சிடிக்கள் பறிமுதல்
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தனது பெரும்பாலான படங்களின் இசையை இசைத் தட்டுகள், கேசட்டுகள் மற்றும் டிஜிட்டல் வடிவத்தில் வெளியிடும் உரிமையை எக்கோ நிறுவனத்துக்கு கொடுத்திருந்தார் இளையராஜா.
ஆனால் அந்த நிறுவனமோ இளையராஜாவுக்கு தரவேண்டிய ராயல்டி தொகையை தரவில்லை என்று இளையராஜா புகார் தெரிவித்திருந்தார். இதுகுறித்த எழுத்துப் பூர்வமான மனுவை சென்னை போலீஸ் கமிஷனரிடம் கொடுத்தார்.
இசையமைப்பாளரான தனக்கும் படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் ராயல்டியாக மட்டுமே பல கோடி ரூபாயை எக்கோ நிறுவனம் தரவேண்டியுள்ளதாக இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார். துணை கமிஷனர் ஸ்ரீதர், உதவி கமிஷனர் விமலா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் முத்துவேல்பாண்டி 2 சட்டப் பிரிவுகளின் கீழ் எக்கோ நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்தார்.
இதையொட்டி, நேற்று முன்தினம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஏவி.எம். மியூசிக் ஸோன், சரஸ்வதி ஸ்டோர் என்ற கடையில் சோதனை நடந்ததாகவும், அனுமதி பெறாமல் விற்பனைக்கு வைத்திருந்த ஆடியோ சினிமா பாடல் சி.டி.கள் 179 பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் கூறினார்கள். அதே நாளில் எக்கோ நிறுவனத்திலும் சோதனை நடத்தி 10 மாஸ்டர் பிரிண்டுகளைக் கைப்பற்றினர்.
இந்த நிலையில், நேற்று 2-வது நாளாக கோபாலபுரத்தில் உள்ள எக்கோ ரிக்கார்டிங் நிறுவனத்திலும் சோதனை நடந்தது. மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணிக்கு மேலும் சோதனை நீடித்தது. உதவி கமிஷனர் விமலா, இன்ஸ்பெக்டர் முத்துவேல்பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் ராமு ஆகியோர் போலீஸ் படையோடு சென்று இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள ஆடியோ சினிமா பாடல் சி.டி.களை ஒரு லாரி நிறைய பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர். அத்தனையும் அனுமதி பெறாத சி.டி.கள் என்றும் போலீசார் கூறினார்கள். இதேபோல, மேலும் சில நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
GOAT பட பாடல்.. திரிஷாலாம் இல்லையாம்.. அந்த ஹீரோயின் ஆடப்போறாங்களாம்.. பட்டாசா இருக்குமே