Don't Miss!
- Sports பும்ராவுக்கே அதிர்ச்சி கொடுத்த அஷுதோஷ் சர்மா.. போட்டியை வென்ற மும்பை.. ரசிகர்களை வென்ற பஞ்சாப்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோகநாத் மரணம் - கேபி, கமல் அஞ்சலி
அபூர்வ ராகங்கள், அவள் ஒரு தொடர்கதை, மரோசரித்ரா (தெலுங்கு), ஏக் துஜே கேலியே (இந்தி), நினைத்தாலே இனிக்கும் உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், பி.எஸ்.லோகநாத். கே.பாலசந்தர் இயக்கிய செய்த 55 படங்களுக்கு, இவர் ஒளிப்பதிவு செய்தவர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதல் ஷாட் வைத்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
பி.எஸ்.லோகநாத், சென்னை கே.கே.நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல், நேற்று காலை 5.30 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.
அவருடைய உடலுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், சிவகுமார், பார்த்திபன், டைரக்டர் கே.பாலசந்தர் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் மாலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பிறகு அவருடைய உடல் மாலை 5.30 மணிக்கு கண்ணம்மாப்பேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
மறைந்த பி.எஸ்.லோகநாத்துக்கு ராதா என்ற மனைவியும், 2 மகன்கள், 2 மகள்களும் உள்ளனர்.