Don't Miss!
- Finance PF பேலன்ஸ் தொகையை எளிதாக தெரிந்துகொள் 4 எளிய வழிமுறைகள்..!
- News 5 வருடமாக.. நீங்க பட்ட கஷ்டமெல்லாம் சரியாக போகுது! கன்னி ராசியை புரட்டி போடும் குரு பெயர்ச்சி.. பலன்
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- Automobiles சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Technology பட்டிதொட்டியெல்லாம் கலக்கும் BSNL.. மாதம் ரூ.99.. 365 நாள் வேலிடிட்டி.. கம்மி காசில் ஓஹோனு நன்மை..
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
விக்ரமின் கருடாவுக்காக 100 ஏக்கரில் பிரமாண்ட செட்!
விக்ரம் நடிக்கும் புதிய படமான கருடாவுக்காக சென்னைக்கு அருகே 100 ஏக்கரில் பிரமாண்ட செட் அமைத்துள்ளனர்.
‘இருமுகன்' படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கவிருக்கும் புதிய படம் ‘கருடா'. இப்படத்தை ‘சமர்', ‘நான் சிகப்பு மனிதன்' ஆகிய படங்களை இயக்கிய திரு இயக்கவிருக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
மகேஷ் மஞ்ச்ரேக்கர்
மேலும், வில்லனாக மகேஷ் மஞ்ச்ரேக்கர் என்ற பாலிவுட் நடிகர் நடிக்கவிருக்கிறார். இவர் இந்தியில் பிரபல இயக்குனராகவும் வலம் வருகிறார். ‘குருஷேத்ரா', ‘நிடான்', ‘பிதா' உள்ளிட்ட 23 படங்களை இவர் இயக்கியுள்ளார். ‘ஸ்லம் டாக் மில்லியனர்', ‘ரெடி' தமிழில் ‘ஆரம்பம்' படத்திலும் நடித்து இருக்கிறார்.
படப்பிடிப்பு
இவருடன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாசர், கருணாஸும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதத்தில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், அதற்கு முன்னதாக ஏப்ரல் 1-ந் தேதியே இப்படத்தின் படப்பிடிப்பை சென்னையில் தொடங்க இருக்கின்றனர்.
100 ஏக்கரில்
இப்படத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் அருகே 100 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்து அதில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தவுள்ளனர். சென்னையை அடுத்து பொள்ளாச்சி, கோவை, அகமதாபாத், லக்னோ, ஆகிய இடங்களிலும், பெரும்பகுதி படப்பிடிப்பு அரபு நாடுகளிலும் நடைபெற உள்ளது.
ஆக்ஷன் படம்
பரபரப்பான ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகவிருக்கிறது. கிரிநந்த் இசையமைக்கும் இப்படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். சில்வர் லைன் பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கிறது.