Don't Miss!
- News ஈரானுக்கு மிகப்பெரிய பதிலடி கொடுக்க தயார்.. இஸ்ரேல் எடுத்த "திக்" முடிவு.. உலகப்போரை நோக்கி போகுது?
- Finance இனி தினமும் பார்ட்டி தான்.. சோமேட்டோ கொண்டு வந்த புதிய சேவை..!!
- Technology டாப் 5 அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் Mobile போன்கள்.. பட்ஜெட்ல 120W சார்ஜிங்.. 100% சார்ஜ் வெறும் 20 நிமிடங்களில்..
- Automobiles சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
- Lifestyle 1/2 கப் பாசிப்பருப்பு வெச்சு.. இப்படி ஒருடைம் கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும்..
- Sports ஜெய்ஸ்வாலுக்கு டாடா பைபை.. இந்திய அணியின் துவக்க வீரராக மாறிய ஜாம்பவான்.. ரோஹித் அதிரடி முடிவு
- Education தமிழக அரசு கல்லூரிகளில் வேலை செய்ய அரிய வாய்ப்பு...!!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
சம்பள உயர்வு பிரச்சினை... சினிமா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில், மொத்தம் 23 சங்கங்கள் உள்ளன. அதில் லைட் மேன், நடன கலைஞர்கள், ஸ்டண்ட் நடிகர்கள் உள்பட 9 சங்கங்களில், தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் கடந்த 7 மாதங்களாக சம்பள உயர்வு கேட்டு வருகிறார்கள்.
இதுவரை சம்பள உயர்வு கிடைக்கவில்லை. எனவே சென்னை 100 அடி சாலையில் உள்ள சம்மேளன அலுவலகம் முன்பு நேற்று காலை சுமார் 200 தொழிலாளர்கள் கூடி, ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
"சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன் உடனடியாக பட அதிபர்களுடன் சம்பள உயர்வு பற்றி பேசி முடிக்க வேண்டும் என்றும், அப்படி முடிக்காத பட்சத்தில், அவர் பதவி விலக வேண்டும்'' என்றும் அவர்கள் கூறினார்கள்.
இதுபற்றி வி.சி.குகநாதனிடம் கேட்டபோது, "தொழிலாளர்களின் சம்பள உயர்வு பற்றி விரைவில் பேசி முடிக்கப்படும்'' என்று தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் கே.முரளிதரன் கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு உடன்படாமல், தன்னிச்சையாக தொழிலாளர்கள் சம்பள உயர்வை அறிவித்தால், அது அரசாங்கத்துக்கு எதிராக அமைந்துவிடும். எனவே தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது'' என்றார்.