Don't Miss!
- News பாஜக - விசிகவினர் இடையே அடிதடி.. 2 நிர்வாகிகளின் மண்டை உடைப்பு.. அரியலூரில் பதற்றம் - போலீஸ் குவிப்பு
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Technology ஏப்.22-24.. அடுத்த வாரம் அமோக வாரம்.. விற்பனைக்கு வரும் 3 புது 5G போன்கள்.. எல்லாமே ரூ.15,000.. எதை வாங்கலாம்?
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஏரியில் மூழ்கி 2 நாட்கள் கழித்து கன்னட நடிகர் உதய்யின் உடல் மீட்பு
பெங்களூர்: பெங்களூர் அருகே உள்ள ஏரியில் மூழ்கி பலியான 2 கன்னட நடிகர்களில் ஒருவரின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது.
துனியா விஜய் ஹீரோவாக நடித்து வரும் கன்னட படமான மஸ்தி குடியின் கிளைமாக்ஸ் காட்சி பெங்களூர் அருகே உள்ள திப்பகொண்டனஹள்ளி ஏரியில் நேற்று முன்தினம் மதியம் 3 மணிக்கு படமாக்கப்பட்டது.
விஜய், வில்லன்கள் அனில் மற்றும் உதய் ஆகியோர் ஹெலிகாப்டரில் இருந்து ஏரியில் குதித்தனர். இதில் விஜய் மட்டும் நீந்தி கரை வந்தார். அனிலும், உதய்யும் நீரில் மூழ்கி பலியாகினர்.
அவர்களின் உடல்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் ஆகியோர் உள்ளூர் மீனவர்களின் உதவியோடு தேடி வருகின்றனர். இந்நிலையில் இன்று உதய்யின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
அனிலின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. நீச்சல் தெரியாத அனில் மற்றும் உதய்யை நீரில் குதிக்க வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.