Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
24: அடர்ந்த தாடி, கலைந்த முடியுடன் போஸ்டரில் 'மிரட்டும்' சூர்யா!
சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் 24 படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் புதிய போஸ்டர்களை நடிகர் படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர்.
சூர்யா நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் 24. 'யாவரும் நலம்' விக்ரம் குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சமந்தா, நித்யாமேனன் இருவரும் ஜோடியாக நடித்திருக்கின்றனர்.
ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர்.
#24TheMovie @2D_ENTPVTLTD @StudioGreen2 @deepakbhojraj @arrahman #vikramkumar Found both interesting!Hope you like!! pic.twitter.com/2V7QKT7upV
— Suriya Sivakumar (@Suriya_offl) January 23, 2016
இந்த போஸ்டரில் கோட்சூட் அணிந்து சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அடர்ந்த தாடி, கலைந்த தலைமுடி மற்றும் அதிகபட்ச மிரட்டல் பார்வையுடன் சூர்யா காணப்படுகிறார்.
இந்த போஸ்டரை பார்க்கும் போது திகிலூட்டும் விதமாக இருக்கிறது. இப்படத்தில் சூர்யா நடித்திருக்கும் 3 விதமான கெட்டப்களில் இதுவும் ஒன்று என்று கூறுகின்றனர்.
டைம் மெஷின் சம்பந்தப்பட்ட கதை என்பதும் சூர்யா தனது அதிகப்படியான உழைப்பைக் கொட்டியிருப்பதும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருக்கும் இப்படம் தேர்தல் காரணமாக முன்கூட்டியே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.