Don't Miss!
- Sports இது சரிப்பட்டு வராது.. கேப்டனாக மாறிய கோலி.. சிராஜ்க்கு திட்டம் போட்டு விக்கெட் எடுத்த ஆர்சிபி
- News சென்னையின் எதிர்காலத்தை மாற்ற போகும்.. 43 கிமீ.. இந்த ஸ்ட்ரெச் தான் இனி எல்லாமே.. ரொம்ப முக்கியம்
- Lifestyle உங்க உதடுகள் கொஞ்சம் கொஞ்சமா கருப்பா மாறுதா? அப்ப இந்த பிரச்சினைகளில் ஒன்று உங்களுக்கு இருக்காம்...!
- Finance 2030-ல் 1 கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா? இப்பவே தங்கம் வாங்கணும்னா வாங்கிடுங்க!
- Technology கழிவறையில் "கை வைக்கும்" இந்திய ரயில்வே.. Gandhvedh என்கிற மானிட்டர்-ஐ உள்ளே இன்ஸ்டால் செய்ய முடிவு.. ஏன்?
- Automobiles ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
ஆசினால் விஜய் படத்துக்கும் தலைவலி!
இலங்கையை வைத்து இப்போது சினிமாத்துறையினரும் விளையாட ஆரம்பித்து விட்டனர். ஒரு குரூப், போகலாம் தப்பில்லை என்று பேசி வருகிறது. இன்னொரு குரூப்போ, போகவே கூடாது. போனால் தடை செய்ய வேண்டும் என்று பேசி வருகிறது.
ஆசின் விவகாரத்தில் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் தமிழ் திரையுலகம் பெரும் தடுமாற்றத்திலும், குழப்பத்திலும் உள்ளன.
ஆனால் தற்போது உலகத் தமிழ் அமைப்புகள் இந்த விஷயத்தில் ஒரு முடிவுக்கும், தெளிவுக்கும் வந்துள்ளனர்.
ஆசின் நடித்த படங்களைப் புறக்கணிப்போம் என்று இங்கிலாந்து, கனடா, அமெரிக்காவில் பிரபலமான இரு தமிழ் அமைப்புகள் அறிவித்து விட்டன. மலேசியாவிலும் கொதிப்பு எழுந்துள்ளது.
இப்போது அமெரிக்காவைச் சேர்ந்த தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பும் ஆசினுக்கு தடை போட்டு விட்டது. இந்த கூட்டமைப்பின் கீழ் 30 சங்கங்கள் உள்ளனவாம்.
இலங்கைக்கு செல்லும் தமிழ் நடிகர், நடிகைகளின் படங்களை அமெரிக்காவில் திரையிட விடமாட்டோம் என கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக அசின் நடித்து வெளியாக உள்ள படத்தை காவல் காதல் படத்தைப் புறக்கணிப்போம் என அமெரிகக தமிழ் அமைப்புகளின் தலைவர் பழனி சுந்தரம் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் சித்திக் இயக்கும் படம் காவல் காதல். இதில் அசின் நடித்துள்ளார். இந்தத் தடை அறிவிப்பால் காவல் காதலுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
தமிழப் படங்களுக்கு தமிழகத்தை விட வெளிநாட்டு மார்க்கெட்தான் பெருமளவில் பணத்தைக் கொட்டிக் கொடுக்கிறது. எனவே விரைவில் நடவடிக்கை எதையாவது எடுப்பார்கள் என்று தெரிகிறது.