Don't Miss!
- Lifestyle ஏசி அறையில் தூங்குவதால் உங்க உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் தெரியுமா? ஏசி ரூம்ல இப்படி தூங்காதீங்க...!
- News கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச முன்பதிவு.. ஆட்சியருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? ஐகோர்ட் கிளை கேள்வி
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Sports சிஎஸ்கே அணியில் 35 வயது வீரருக்கு கல்தா..வாய்ப்பை வீணடித்ததால் முடிவு.. ரூ.8 கோடி வீரருக்கு வாய்ப்பு
- Finance 4.54 பில்லியன் வருட பழைய பொக்கிஷம்.. உள்ளிருந்து வந்த உஸ்ஸ் சத்தம்.. திறந்து பார்த்தவர்களுக்கு ஷாக்
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
செக் மோசடி.. விஜயகாந்த் படத் தயாரிப்பாளர் ஆபாவாணனுக்கு 5 ஆண்டு சிறை!
சென்னை: செக் மோசடி வழக்கில் பிரபல தயாரிப்பாளர் ஆபாவாணனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் நடித்த ஊமைவிழிகள், உழவன் மகன், செந்தூரப்பூவே உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களைத் தயாரித்தவர் ஆபாவாணன்.
கறுப்பு ரோஜா படத்துக்குப் பிறகு அவர் புதிய படம் தயாரிக்கவில்லை. கடும் நஷ்டத்தால் மிகவும் சிக்கலுக்குள்ளானார்
1999ல் சென்னை கதீட்ரல் சாலை பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு தொடங்கினார். அவர் வங்கிச் சலுகையை தவறாகப்பயன்படுத்தி 3.31 கோடி ஏமாற்றியதாக ஆபாவாணன் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. வங்கியின் மேலாளர் ராஜகோபால், உதவி மேலாளர் ராமானுஜம் ஆகியோர் மீதும் சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.
இந்த வழக்கில் இவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆபாவாணனுக்கு சிறை தண்டனையோடு 2 கோடியே 40 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது சென்னை சிபிஐ நீதிமன்றம்.
மோசடிக்கு உடந்தையாக இருந்த பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வங்கி மேலாளருக்கு 15 லட்சம், உதவி மேலாளருக்கு 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.