Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜூன் 9 முதல் ப்ளாஸோ... 9 திரைகள் கொண்ட ராஜ அரங்குகள்... தமிழகத்தின் முதல் ஐமேக்ஸ்!
வரும் ஜூன் 9-ம் தேதி முதல் சென்னையில் மேலும் 9 புதிய திரையரங்குகள் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளன. இந்த 9 அரங்குகளில் ஒரு ஐமேக்ஸும் உண்டு.
சென்னை வட பழனியில் உள்ள விஜயா ஃபோரம் மாலில் இந்த 9 அரங்குகளும் அமைந்துள்ளன.
இவை அனைத்தும் பழங்கால மன்னர்களின் அரண்மனை மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளன. மிக நவீன திரைகள், ஒலி அம்சம், ஒளிப்படக் கருவிகளை இதில் பொருத்தியிருக்கிறார்கள்.
இந்த அரங்குகள் கட்டுமானப் பணி அனைத்தும் முடிந்துவிட்டாலும், அரசுத் தரப்பில் அனுமதி தரப்படாமல் இருந்தது.
இப்போது அனுமதி கிடைத்துவிட்டதால், வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர். வரும் ஜூன் 9-ம் தேதி இந்த அரங்குகள் திறக்கப்படுகின்றன. சத்யம் சினிமாஸ் நிறுவனம்தான் இந்த அரங்குகளின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாங்குமா?
பொதுவாகவே வட பழனி மிகவும் நெரிசலான பகுதி. நாள் முழுக்க வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை. கமலா, ஏவிஎம் ராஜேஸ்வரி, ஐநாக்ஸ் போன்ற திரையரங்குகள் இந்த சாலையில் உள்ளன. இப்போது 9 அரங்குகள் கொண்ட இந்த ப்ளாஸோ திறக்கப்பட்டால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த ப்ளாஸோ தவிர மேலும் 2 மல்டிப்ளெக்ஸ்கள் வடபழனி, விருகம்பாக்கம் பகுதிகளில் அமையவிருப்பது குறிப்பிடத்தக்கது.