Don't Miss!
- News "கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட்".. CSK போட்டியின்போது 12 பேரை கொக்கி போட்டு தூக்கிய போலீசார்!
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
முத்துக்குமார் மரணம் தரும் பாடம்... இது மாற்றத்துக்கான நேரம்!
- பட்டுக்கோட்டை பிரபாகர்
முத்துக்குமாரின் மரணத்திற்கு கண்ணீர் சிந்தி கவிதையால் அனுதாபம் காட்டி சட்டென்று மறந்து போய் சுதந்திர தின பட்டி மன்றத்திற்குச் சிரிப்பதை விடவும்.. அவரின் மரணம் தரும் பாடத்தை மனதில் ஏந்த வேண்டியது அனைவருக்கும் குறிப்பாக இந்தத் தலைமுறை இளம் படைப்பாளிகளுக்கு மிக அவசியம். கட்டாயக் கடமை.
ஞானியும்,கமல்ஹாசனும் லேசாகக் கோடி காட்டினார்கள். "மெல்ல மெல்ல செய்து கொண்ட தற்கொலை இதுவென்பதால் கோபம்,'' என்றார் கமல். "படைப்புத் திறனுக்கும் சில பழக்க வழக்கங்களும் கொஞ்சமும் சம்மந்தமில்லை,'' என்றார் ஞானி.
எப்போதும் எங்கோ நடக்கும் பிரச்சினைகள் நம்மை அதிகம் பாதிப்பதில்லை. வேறு ஊரில் குடிசைகள் தீப்பிடித்து எரிந்தால் அது சாதாரணச் செய்திதான். நம் தெருவில் என்றால் கூடுதல் பதட்டமும் எச்சரிக்கை உணர்வும் சேரும். எந்த இழப்பும் வேதனையும் நம் நெருக்கத்தில் நிகழும்போதுதான் அதன் வலிமையும் வீரியமும் அழுத்தமாகப் புரியும்.
இளம் மனைவியையும், ஒன்பது வயது பையனையும், எந்த விபரமும் தெரியாமல் பூப்பூவாய் புன்னகைக்கும் எட்டு மாத பெண் குழந்தையையும் பரிதவிக்க விட்டுச் சென்றிருக்கிறார் முத்துக்குமார். இனி இதைத் திருத்தி எழுத முடியாது. கால இயந்திரத்தில் பயணித்து அவரை மீட்டு வரச் சாத்தியமில்லை.
ஆனால்... இனி இப்படி ஒரு தன்னைத் தானே சிதைத்துக் கொள்ளும் எவரையும் குறிப்பாக ஒரு படைப்பாளியைச் சந்திக்கும்போது விமரிசிப்பதை விடுத்து.. அவனை இந்த மாய வலையிலிருந்து மீட்டு விடுவிப்பதெப்படி என்று முனைப்புடன் முயல்வோம். வீட்டுக்கு ஒரு மரம் அப்புறம் வளர்ப்போம். ஒவ்வொரு வீட்டுக்கும் இருக்கும் ஒரே ஒரு தலைவனை முதலில் காப்போம்.
கண்ணீர் அஞ்சலி தெரிவித்த அத்தனைத் தலைவர்களும் இதற்காகவேக் கூடி அமர்ந்து பேசி ஒரு மிகப் பெரிய சமூக மாற்றத்திற்காக போருக்கு நிகரான போராட்டம் நிகழ்த்த வேண்டியது காலத்தின் முக்கியத் தேவையாக இருக்கிறது.
-
பழனிக்கே பஞ்சாமிர்தமா?.. கூலி படத்தோட கதையில பல வருஷத்துக்கு முன்னாடியே ரஜினி நடிச்சிட்டாரே பாஸ்!
-
Ghilli Box Office: 3 நாளும் வெறித்தனம்.. ரீ ரிலீஸில் மரண மாஸ் காட்டும் கில்லி.. இத்தனை கோடி வசூலா?
-
கடைசியில சூப்பர் ஸ்டாரை சரவணா ஸ்டோர்ஸ் ஓனரா மாத்திட்டாங்களே.. இது வேறலெவல் ட்ரோல்.. செம சிங்க்!