twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தூக்கு மர பூக்கள்... ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்கள் கதை படமாகிறது!

    By Shankar
    |

    ஆந்திராவில் செம்மரக்கட்டை வெட்டினார்கள் என்று சொல்லி 20 தமிழர்களை சுட்டுக் கொன்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஒரு படம் உருவாகிறது.

    இந்தப் படத்துக்கு தூக்கு மர பூக்கள் என்று தலைப்பிட்டுள்ளனர்.

    இந்தப் படத்தை ஜெய விஜய சாமுண்டீஸ்வரி புரொடக்ஷன் - ஸ்காட் மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

    A movie on 20 Tamils Killing in Andhra

    முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கவிருக்கின்றனர். திரைக்கதை, வசனத்தை கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் எழுத, கதை எழுதி இயக்குகிறார்கள் இரட்டையர்களான வி.ஆர்.காளிதாஸ், வி.அகஸ்டின்.

    செம்மரக்கட்டை வெட்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் மானிதாபமின்றி, துன்புறுத்தி, உடல் உறுப்புகளை சிதைத்து அப்பாவிகளைக் கொன்ற கொடூரத்தின் பின்னணி என்ன? என்ற உண்மை சம்பவத்தை வெளிப்படுத்தவே இப்படம் என்றார்கள் இயக்குனர்கள்.

    சுனில் சேவியர் இசையமைக்க, பாபு ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

    தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்ற பகுதிகளிலேயே இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பை வெளியிடப் போவதாக இயக்குநர்கள் தெரிவித்தனர்.

      English summary
      Thookku Mara Pookkal, a new Tamil movie is in making on the backdrop of 20 Tamils killed by Andhra Police.
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X