Don't Miss!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- News வெறும் 15 நிமிடம் தான்.. உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையால் புதுச்சேரி இளைஞர் பலி.. என்ன நடந்தது?
- Education 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்.. மே 10-ம் தேதி ரிசல்டுக்கு மாணவர்கள்
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
தினசரி வாழ்க்கையின் அவலங்களை தட்டிக் கேட்க வரும் “திறந்திடு சீசே”
சென்னை: சமூகத்தில் நடைபெறும் குற்றங்களை மையமாக வைத்து வெளிவருகின்றதாம் திறந்திடு சீசே திரைப்படம்.
தன்ஷிகா, அறிமுக நாயகன் வீரவன் ஸ்டாலின், நாராயண் மற்றும் அஞ்சனா கீர்த்தி ஆகியோரது நடிப்பில் சுதாஸ் புரொடக்ஷன் சுதா வீரவன் ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் "திறந்திடு சீசே".
இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளவர் இயக்குனர் ஷங்கரின் இணை இயக்குனர் நிமேஷ்வர்ஷன்.
உண்மைச் சம்பவங்களே கதைக்கரு:
இப்படம் குறித்து தன்ஷிகா கூறும்போது, "உண்மை சம்பவங்களை அடிப்படியாக கொண்டு அமைத்திருந்த கதையமைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சார்மி என்ற பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன்.
மிகவும் பிடித்தமான கதாப்பாத்திரம்:
இந்தக் கதையைக் கேட்ட மாத்திரத்தில் எனக்கு இந்த கதாப்பாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. எனினும் இந்தக் கதாபாத்திரத்தில் என்னால் சோபிக்க முடியுமா என்ற ஐயம் என்னுள் இருந்து வந்தது உண்மைதான். ஆனால் படத்தை பார்த்த அனைவரும் என்னை பாராட்டுவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது.
உழைப்பில் வந்த நடிப்பு:
என்னுடைய நடிப்பில் சிறிது அதிகமாய் உணர்வுகளைக் காட்டினாலும் படத்தின் முழு அளவியலே மாறிவிடக் கூடும். அவை எல்லாவற்றையும் சரி வர அமைத்து இந்த கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன்.
பெருமையான பாத்திரம்:
பெண்ணுக்கும் அவளது உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் "திறந்திடு சீசே" படத்தில் நடித்தது எனக்கு மிகவும் பெருமையாகவுள்ளது.
சமூக அவலங்களுக்கு எதிராக:
குடி பழக்கம், பாலியல் வன் கொடுமை என சமூக அவலங்களுக்கு எதிராக கருத்தமைப்பு கொண்ட ஒரு திரைப்படம் திறந்திடு சீசே.
குடும்பப் படம் இது:
இது குடும்பங்களுக்கான படம். சமுதாய நோக்குடன் திரைப்படத்தை தயாரிக்கும் இந்த கூட்டணியுடன் இணைந்து திறந்திடு சீசே படத்தில் நடித்தது எனக்கு மிகவும் பெருமையாகவுள்ளது." என்று கூறினார்.
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!
-
விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்