Don't Miss!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- News பாஜக - விசிகவினர் இடையே அடிதடி.. 2 நிர்வாகிகளின் மண்டை உடைப்பு.. அரியலூரில் பதற்றம் - போலீஸ் குவிப்பு
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Technology ஏப்.22-24.. அடுத்த வாரம் அமோக வாரம்.. விற்பனைக்கு வரும் 3 புது 5G போன்கள்.. எல்லாமே ரூ.15,000.. எதை வாங்கலாம்?
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
மீள முடியாத துக்க இரவு!
- வெங்கட்
இந்த இரவு எங்கள் தமிழ் திரை உலகில் பலருக்கும் நித்திரை வராத இரவு ... நேற்றைய சிந்தனைகளில் முழுகும் இரவு .... சித்தாந்த வேதாந்த கர்ம தர்ம சிந்தனைகள் முட்டி மோதிக் கொள்ளும் இரவு...
இளையராஜா, ஞானி என்ற நிலை எல்லாம் இன்றி மறுக்க முடியாமல் மறக்க முடியாமல் கலங்கி இருக்கும் இரவு
கதாசிரியர் செல்வராஜ் 'அக்கக்கோ எனும் கீதம் அதுதானே அதன் கீதம்...' என தன்னை தானே ஆற்றிக்கொள்ள முயற்சிக்கும் இரவு..
கங்கை அமரன் கலங்கி கலங்கி கதறி அழுதாலும் ஆறாத துக்கத்தை அசை போட்டு அசை போட்டு ஜீரணிக்க போராடும் இரவு...
பாரதிராஜா நிறம் மாறாத பூவாக நிஜ வாழ்க்கையில் வாழ்ந்த பஞ்சு அண்ணனின் நினைவோடு புலம்பி புலம்பி பிதற்றித் தள்ளும் இரவு..
கண்ணதாசன் குடும்பத்தார் மீண்டும் ஒரு முறை கவிஞரை இழந்த சோகம் தாக்கியது போல துவண்டு போகும் முடியாத விடியாத இரவு
பாலச்சந்தர் இல்லாமல் பாதி பலம் இழந்த ரஜினிகாந்துக்கோ அஸ்திவாரத்தில் விழுந்த இரண்டாவது அடியாக வலிக்கின்ற இரவு..
கமலஹாசனுக்கு இன்றுதான் உண்மையில் உடனடியாக ஓடி வராத அளவுக்கு மனதில் அடிபட்ட மாயங்கள் காயங்கள் நிறைந்த இரவு..
இப்படி சென்னை நகரத்திலும் நகரத்தார் சமூகத்திலும் பலரையும் பாதித்த பஞ்சு அருணாச்சலம் அவர்களே நீங்கள் எங்கும் செல்ல முடியாது
எங்களுடன் இருங்கள் ... நாங்கள் எப்போதும் உங்களுடந்தான்!