Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சுந்தர்.சி படத்துக்கு இசையமைப்பதில் மகிழ்ச்சி - ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னை: சுந்தர்.சியின் பிரமாண்ட படத்துக்கு இசையமைப்பதை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உறுதி செய்திருக்கிறார்.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 வது படத்தை சுமார் 350 கோடி பட்ஜெட்டில் சுந்தர்.சி இயக்கவிருக்கிறார். இதில் ஹீரோவாக நடிக்க மகேஷ் பாபு, சூர்யா ஆகியோரிடம் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
சில நாட்களுக்கு முன் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கப் போவதாக நமது தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது அது உண்மையாகிவிட்டது.
இப்படத்துக்கு இசையமைப்பது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் ''சுந்தர்.சி இயக்கவுள்ள ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸின் 100 வது படத்துக்கு இசையமைக்கவிருக்கிறேன்.
மகிழ்ச்சியாக உள்ளது. படக்குழுவினருக்கு என்னுடைய இனிய வாழ்த்துக்கள்'' என்று தெரிவித்திருக்கிறார்.
ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களை வைத்து 30 படங்கள் வரை இயக்கியிருந்தாலும், சுந்தர்.சியின் எந்தவொரு படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இதுவரை இசையமைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.