Don't Miss!
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- News கட்சியையே உடைக்கும் அளவிற்கு கோபம்.. வேலையை தொடங்கிய முக்கிய புள்ளி.. ஆட்டம் காணும் "அந்த" கட்சி?
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரியோ ஒலிம்பிக் 2016: ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதுவராக நியமனம்!
சென்னை: ரியோ ஒலிம்பிக் போட்டியின் நல்லெண்ணத் தூதுவராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
31 வது ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஆகஸ்ட் மாதம் பிரேசில் நாட்டில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியின் நல்லெண்ணத் தூதுவராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை இந்திய ஒலிம்பிக் சங்கம்(ஐஓஏ) நியமித்துள்ளது.
முன்னதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டார். இதற்கு யோகேஷ்வரர் தத், மில்கா சிங், கவுதம் கம்பீர் போன்ற விளையாட்டு வீர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் சல்மான் கான் சர்ச்சையில் இருந்து தப்பிக்க மேலும் பலரை நல்லெண்ணத் தூதுவர்களாக ஐஓஏ நியமித்து வருகிறது. இதற்காக சச்சின் தெண்டுல்கர், அபினவ் பிந்த்ரா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரிடம் தூதுவர்களாக இருக்குமாறு ஐஓஏ வேண்டுகோள் விடுத்தது.
சச்சின் டெண்டுல்கர், அபினவ் பிந்த்ரா ஆகியோர் இதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், தற்போது ரஹ்மானும் இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து நல்லெண்ணத் தூதுவர் பதவி தனக்கு பெருமை அளிப்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டியளித்திருக்கிறார்.